மும்பை: 20 ஓவர் உலக கோப்பை வென்ற இந்திய அணிக்கு மும்பை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது. பிசிசிஐ தரப்பில் மும்பை வான்கடே மைதானத்தில் உலக கோப்பை வென்ற இந்திய அணிக்கு வெற்றி விழா நடத்தப்பட்டது. இதில் கலந்து கொள்வதற்காக இந்திய அணி வீரர்கள் விமானம் மூலம் மும்பை விமான நிலையத்திற்கு விரைந்தனர்.
#WATCH | Mumbai: The 'vijay rath' bus for Team India, which will carry the T20 World Cup champions, gets stuck in the crowd. Police personnel disperse the crowd and make way for the bus to reach Marine Drive. pic.twitter.com/FzB4tyckD5
— ANI (@ANI) July 4, 2024
விமான நிலைய ஓடுபாதையை அடைந்த விமானத்திற்கு பாரம்பரிய முறைப்படி தண்ணீர் பீய்ச்சி அடித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து விமான நிலையத்தை விட்டு வெளியே வந்த இந்திய வீரர்களுக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். நாரிமன் பாயின்ட் பகுதியில் இருந்து வாகனத்தில் வீரர்கள் வான்கடே மைதானத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.
வழிநெடுக இந்திய வீரர்களுக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். வான்கடே மைதானத்திற்கு செல்லும் இந்திய வீரர்கள் லட்சக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில் உலக கோப்பை காட்சிப்படுத்துகின்றனர். தொடர்ந்து நடைபெறும் நிகழ்வில் 20 ஓவர் உலக கோப்பை வென்ற இந்திய வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் குழு உள்ளிட்டோருக்கு 125 கோடி ரூபாய் பரிசுத் தொகை பிசிசிஐ சார்பில் வழங்கப்படுகிறது.