ETV Bharat / bharat

ஹத்ராஸ் கூட்ட நெரிசல் உயிரிழப்பு: 6 பேர் கைது! முக்கிய குற்றவாளிக்கு வலைவீச்சு- போலீசார் தகவல்! - Hathras Stampede

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 4, 2024, 6:34 PM IST

ஹத்ராஸ் கூட்ட நெரிசல் உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் முக்கிய குற்றவாளி குறித்து தகவல் தெரிவித்தால் 1 லட்ச ரூபாய் வரை சன்மானம் வழங்கப்படும் என உத்தர பிரதேச போலீசார் தெரிவித்துள்ளனர்.

Etv Bharat
Aligarh IG Shalabh Mathur (Photo/ANI)

ஹத்ராஸ்: உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸில் ஆன்மீகவாதி போலோ பாபா சொற்பொழிவு நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், வழக்கு குறித்து பேசிய அலிகர்க் ஐஜி ஷலப் மதுர், ஹத்ராஸ் கூட்ட நெரிசல் சிக்கி 121 பேர் உயிரிழந்த நிலையில், அனைவரது உடல்களும் அடையாளம் காணப்பட்டு பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உறவினர்களிடம் வழங்கப்பட்டதாக கூறினார்.

மேலும், ஆன்மீக சொற்பொழிவு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த 6 பேரை இதுவரை கைது செய்து உள்ளதாக அவர் கூறினார். நிகழ்ச்சியில் கூட்ட நெரிசலில் சிக்கி பலர் உயிரிழந்ததை அடுத்து அனைவரும் தலைமறைவான நிலையில் தற்போது அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.

இரண்டு பெண்கள் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், முக்கிய குற்றவாளி என போலீசார் கூறூம் பிரகாஷ் மதுகர் என்பவரை தேடி வருவதாகவும் அவர் கூறினார். கூட்ட நெரிசல் உயிரிழப்பு சம்பவத்திற்கு பின்னர் பிரகாஷ் மதுகர் தலைமறைவானதாகவும் அவர் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு 1 லட்ச ரூபாய் வரை சன்மானம் வழங்கப்படும் என்றும் ஐஜி ஷலப் மதுர் தெரிவித்தார்.

மேலும், பிரகாஷ் மதுகருக்கு எதிராக பிணையில் வெளியே வரமுடியாத வகையிலான பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட உள்ளதாகவும், மேலும் இந்த சம்பவத்தில் ஏதேனும் சதித் திட்டம் உள்ளதா என்று விசாரித்து வருவதகாவும் அவர் கூறினார். முன்னதாக ஆன்மீகவாதி போலே பாபாவின் ராம் குதிர் டிரஸ்ட்டில் போலீசார் சோதனை நடத்தினர்.

நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது போலீசார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், ஆன்மீகவாதி போலே பாபா மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்து எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. முன்னதாக நேற்று (ஜூலை.3) சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்த முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், சம்பவம் தொடர்பாக நீதிமன்ற விசாரணை நடத்த உத்தரவிட்டார்.

இது தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான மூன்று நபர் கொண்ட நீதித்துறை விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. அடுத்த இரண்டு மாதங்களுக்குள் வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க குழுவுக்கு முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

ஹத்ராஸ் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 2 லட்ச ரூபாய் மற்றும் படுகாயம் அடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் பிரதமரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: ஜார்கண்ட் முதலமைச்சராக ஹேமந்த் சோரன் பதவியேற்பு! - Hemant Soren take oath as CM

ஹத்ராஸ்: உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸில் ஆன்மீகவாதி போலோ பாபா சொற்பொழிவு நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், வழக்கு குறித்து பேசிய அலிகர்க் ஐஜி ஷலப் மதுர், ஹத்ராஸ் கூட்ட நெரிசல் சிக்கி 121 பேர் உயிரிழந்த நிலையில், அனைவரது உடல்களும் அடையாளம் காணப்பட்டு பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உறவினர்களிடம் வழங்கப்பட்டதாக கூறினார்.

மேலும், ஆன்மீக சொற்பொழிவு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த 6 பேரை இதுவரை கைது செய்து உள்ளதாக அவர் கூறினார். நிகழ்ச்சியில் கூட்ட நெரிசலில் சிக்கி பலர் உயிரிழந்ததை அடுத்து அனைவரும் தலைமறைவான நிலையில் தற்போது அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.

இரண்டு பெண்கள் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், முக்கிய குற்றவாளி என போலீசார் கூறூம் பிரகாஷ் மதுகர் என்பவரை தேடி வருவதாகவும் அவர் கூறினார். கூட்ட நெரிசல் உயிரிழப்பு சம்பவத்திற்கு பின்னர் பிரகாஷ் மதுகர் தலைமறைவானதாகவும் அவர் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு 1 லட்ச ரூபாய் வரை சன்மானம் வழங்கப்படும் என்றும் ஐஜி ஷலப் மதுர் தெரிவித்தார்.

மேலும், பிரகாஷ் மதுகருக்கு எதிராக பிணையில் வெளியே வரமுடியாத வகையிலான பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட உள்ளதாகவும், மேலும் இந்த சம்பவத்தில் ஏதேனும் சதித் திட்டம் உள்ளதா என்று விசாரித்து வருவதகாவும் அவர் கூறினார். முன்னதாக ஆன்மீகவாதி போலே பாபாவின் ராம் குதிர் டிரஸ்ட்டில் போலீசார் சோதனை நடத்தினர்.

நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது போலீசார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், ஆன்மீகவாதி போலே பாபா மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்து எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. முன்னதாக நேற்று (ஜூலை.3) சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்த முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், சம்பவம் தொடர்பாக நீதிமன்ற விசாரணை நடத்த உத்தரவிட்டார்.

இது தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான மூன்று நபர் கொண்ட நீதித்துறை விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. அடுத்த இரண்டு மாதங்களுக்குள் வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க குழுவுக்கு முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

ஹத்ராஸ் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 2 லட்ச ரூபாய் மற்றும் படுகாயம் அடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் பிரதமரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: ஜார்கண்ட் முதலமைச்சராக ஹேமந்த் சோரன் பதவியேற்பு! - Hemant Soren take oath as CM

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.