தஞ்சாவூர்:உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோயிலில் நவராத்திரியை முன்னிட்டு தஞ்சை பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வருகிறது. அந்தவகையில் 9ம் நாளாக நேற்று பெரியநாயகி அம்மனுக்கு மகிஷாசுரமர்த்தினி அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாரதனை காட்டப்பட்டது.
நவராத்திரி விழா: மகிஷாசுரமர்த்தினி அலங்காரத்தில் அருள்பாலித்த தஞ்சை பெரியநாயகி அம்மன்!
Published : 7 hours ago
மேலும் சரஸ்வதி பூஜையை முன்னிட்டு பெரிய கோயிலில் அமைந்துள்ள ஸ்ரீ மஹா வாராஹி அம்மனுக்கு சரஸ்வதி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. அதேபோல் தஞ்சையில் பிரசித்தி பெற்ற கோவில்களான கொங்கணேஸ்வரர் திருக்கோயிலில் துர்காம்பிகைக்கு சரஸ்வதி அலங்காரமும், காளிகா பரமேஸ்வரி கோயிலில் அம்மனுக்கு மகிஷாசுரமர்த்தினி அலங்காரம் மற்றும் சியாமளாதேவி அம்மன் கோயிலில், சரஸ்வதி அலங்காரமும், அங்காளம்மன் கோயிலில் மகிஷாசுரமர்த்தினி அலங்காரமும் செய்யப்பட்டது. இதில் ஏராளமானோர் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.