திருநெல்வேலி: வாரிசு சான்றிதழ் பெறுவதற்கு ரூ.4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய இளநிலை உதவியாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நெல்லை ராதாபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக அஜித் சண்முகநாதன் என்பவர் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், பணகுடியைச் சார்ந்த சிவபாலன் தனது தாத்தா இறந்து விட்டதால் வாரிசு சான்றிதழ் பெறுவதற்காக அஜீத் சண்முகநாதனை அனுகியுள்ளார். அப்போது, வாரிசு சான்றிதழ் வழங்குவதற்கு ரூ.4ஆயிரம் லஞ்சம் தருமாறு அஜித் சண்முகநாதன் கேட்டுள்ளார்.