ETV Bharat / state

செந்தில் பாலாஜியை மு.க.ஸ்டாலின் அப்படி கூறாலாமா? ஈபிஎஸ் விமர்சனம்! - Edappadi K Palaniswami

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : 2 hours ago

Updated : 1 hours ago

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை வரவேற்க தியாகம் என்ற சொல்லை பயன்படுத்தியது வெட்கக்கேடானது என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி (Photo Credits - ETV Bharat Tamil Nadu)

சேலம்: ஓமலூரில் உள்ள அதிமுக புறநகர் மாவட்ட அலுவலகத்தில் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நிர்வாகிகளைச் சந்தித்தார். பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்து எடப்பாடி பழனிசாமி பேசியதாவது, “திமுக ஆட்சிக்கு வந்து 40 மாதங்களாகிவிட்டது. 2021 பொதுத் தேர்தலின் போது திமுக சார்பில் கொடுக்கப்பட்ட 525 வாக்குறுதிகளில் 10 சதவீதம் கூட நிறைவேற்றவில்லை.

நிறைவேற்றிய வாக்குறுதிகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என வலியுறுத்தியும் இதுவரை பதிலளிக்கவில்லை. 20 நாட்களில் 6 பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நடந்துள்ளது. இதைக் கண்டித்து அதிமுக மகளிர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளது. ஆர்ப்பாட்டம் நடத்திய பிறகும் பாலியல் வன்கொடுமைகள் தொடர்கிறது. திமுக அரசு கும்பகர்ணன் போல தூங்கிக் கொண்டிருக்கிறது.

எடப்பாடி பழனிசாமி பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு அருகில் டன் கணக்கில் போதைப் பொருள் விற்பனையாகிறது. துரிதமாக, கடுமையாக நடவடிக்கை எடுத்து போதைப் பொருள் விற்பனையை தடுத்து நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால் மாணவர், இளைஞர்கள் எதிர்காலம் சீரழிந்து விடும்.

செந்தில் பாலாஜி: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியிருக்கிறது. செந்தில் பாலாஜியை வரவேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போட்ட ட்வீட்டில் ‘உன் தியாகம் பெரிது, உன் உறுதி அதனினும் பெரிது’ என்று தெரிவித்துள்ளார். தியாகம் என்ற சொல்லுக்கே மரியாதை இல்லாமல் போய்விட்டது.

ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு, அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட ஒருவர் சிறையில் இருந்து வெளியே வரும்போது, அதனை தியாகம் என முதல்வரே சொல்வது அதற்கு உண்டான மரியாதையை கெடுத்துவிட்டது. நாடு சுதந்திரம் பெறுவதற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்து உயிர் நீத்தவருக்கு தான் தியாகம் என்ற சொல் பொருந்தும். அப்படிப்பட்ட சொல்லை செந்தில் பாலாஜிக்கு பயன்படுத்துவது வெட்கக்கேடானது.

இதையும் படிங்க: கேரளா ஏடிஎம் கொள்ளை; பிடிபட்டவர்கள் மீது 7 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு - மாவட்ட எஸ்பி விளக்கம்!

செந்தில் பாலாஜியை மீண்டும் அமைச்சராக்கினால் அதை மக்கள் பார்த்துக் கொள்வார்கள். ஒவ்வொரு ஆட்சியையும் மக்கள் கண்காணித்து வருகிறார்கள். இந்த ஆட்சி எப்படி நடக்கிறது என்பது தமிழ்நாட்டு மக்கள் விழிப்புணர்வுடன் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சரானால் தேர்தல் நேரத்தில் என்ன செய்ய வேண்டுமோ, அதை மக்கள் செய்வார்கள்” என்று விமர்சனம் செய்தார்.

தொடர்ந்து பேசிய அவர், “செந்தில் பாலாஜிக்கு அமைச்சர் பதவி வழங்கினால், உச்ச நீதிமன்ற நிபந்தனைப்படி காவல் நிலையத்திற்குச் சென்று கையெழுத்திடுவது எப்படி சரியாக இருக்கும்? ஒருவேளை நிபந்தனையை மீறி செந்தில் பாலாஜி செயல்பட்டால் அவர் மீது காவல் துறை எப்படி நடவடிக்கை எடுக்க முடியும்?

உள்ளாட்சித் தேர்தல்: உள்ளாட்சித் தேர்தல் பதவிக்காலம் முடிவடைய உள்ளது. தேர்தல் நடந்தால் அதிமுக சந்திக்கும். தேர்தல் தள்ளிப்போகுமா என்பது அரசின் கையில் உள்ளது. அதிமுக உள்ளாட்சித் தேர்தலைச் சந்திக்க தயாராக உள்ளது.

திமுக பவள விழா: திமுக ஆட்சியில் தவறுகளை மறைப்பதற்காக பவள விழா பொதுக்கூட்டம் நடத்தப்படுகிறது. 2 ஆண்டுகளாக தலைவாசல் கால்நடை பூங்காவை திறக்கவில்லை. ஒரு செங்கல்லை தூக்கிக் கொண்டு ஊர் ஊராகச் சென்று பிரசாரம் செய்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஒரு லட்சம் செங்கல்லைக் கொண்டு கட்டப்பட்ட கால்நடை பூங்காவை திறக்காமல் முடக்கி இருப்பது விவசாயிகளுக்கு செய்யும் விரோதம்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

சேலம்: ஓமலூரில் உள்ள அதிமுக புறநகர் மாவட்ட அலுவலகத்தில் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நிர்வாகிகளைச் சந்தித்தார். பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்து எடப்பாடி பழனிசாமி பேசியதாவது, “திமுக ஆட்சிக்கு வந்து 40 மாதங்களாகிவிட்டது. 2021 பொதுத் தேர்தலின் போது திமுக சார்பில் கொடுக்கப்பட்ட 525 வாக்குறுதிகளில் 10 சதவீதம் கூட நிறைவேற்றவில்லை.

நிறைவேற்றிய வாக்குறுதிகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என வலியுறுத்தியும் இதுவரை பதிலளிக்கவில்லை. 20 நாட்களில் 6 பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நடந்துள்ளது. இதைக் கண்டித்து அதிமுக மகளிர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளது. ஆர்ப்பாட்டம் நடத்திய பிறகும் பாலியல் வன்கொடுமைகள் தொடர்கிறது. திமுக அரசு கும்பகர்ணன் போல தூங்கிக் கொண்டிருக்கிறது.

எடப்பாடி பழனிசாமி பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு அருகில் டன் கணக்கில் போதைப் பொருள் விற்பனையாகிறது. துரிதமாக, கடுமையாக நடவடிக்கை எடுத்து போதைப் பொருள் விற்பனையை தடுத்து நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால் மாணவர், இளைஞர்கள் எதிர்காலம் சீரழிந்து விடும்.

செந்தில் பாலாஜி: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியிருக்கிறது. செந்தில் பாலாஜியை வரவேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போட்ட ட்வீட்டில் ‘உன் தியாகம் பெரிது, உன் உறுதி அதனினும் பெரிது’ என்று தெரிவித்துள்ளார். தியாகம் என்ற சொல்லுக்கே மரியாதை இல்லாமல் போய்விட்டது.

ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு, அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட ஒருவர் சிறையில் இருந்து வெளியே வரும்போது, அதனை தியாகம் என முதல்வரே சொல்வது அதற்கு உண்டான மரியாதையை கெடுத்துவிட்டது. நாடு சுதந்திரம் பெறுவதற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்து உயிர் நீத்தவருக்கு தான் தியாகம் என்ற சொல் பொருந்தும். அப்படிப்பட்ட சொல்லை செந்தில் பாலாஜிக்கு பயன்படுத்துவது வெட்கக்கேடானது.

இதையும் படிங்க: கேரளா ஏடிஎம் கொள்ளை; பிடிபட்டவர்கள் மீது 7 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு - மாவட்ட எஸ்பி விளக்கம்!

செந்தில் பாலாஜியை மீண்டும் அமைச்சராக்கினால் அதை மக்கள் பார்த்துக் கொள்வார்கள். ஒவ்வொரு ஆட்சியையும் மக்கள் கண்காணித்து வருகிறார்கள். இந்த ஆட்சி எப்படி நடக்கிறது என்பது தமிழ்நாட்டு மக்கள் விழிப்புணர்வுடன் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சரானால் தேர்தல் நேரத்தில் என்ன செய்ய வேண்டுமோ, அதை மக்கள் செய்வார்கள்” என்று விமர்சனம் செய்தார்.

தொடர்ந்து பேசிய அவர், “செந்தில் பாலாஜிக்கு அமைச்சர் பதவி வழங்கினால், உச்ச நீதிமன்ற நிபந்தனைப்படி காவல் நிலையத்திற்குச் சென்று கையெழுத்திடுவது எப்படி சரியாக இருக்கும்? ஒருவேளை நிபந்தனையை மீறி செந்தில் பாலாஜி செயல்பட்டால் அவர் மீது காவல் துறை எப்படி நடவடிக்கை எடுக்க முடியும்?

உள்ளாட்சித் தேர்தல்: உள்ளாட்சித் தேர்தல் பதவிக்காலம் முடிவடைய உள்ளது. தேர்தல் நடந்தால் அதிமுக சந்திக்கும். தேர்தல் தள்ளிப்போகுமா என்பது அரசின் கையில் உள்ளது. அதிமுக உள்ளாட்சித் தேர்தலைச் சந்திக்க தயாராக உள்ளது.

திமுக பவள விழா: திமுக ஆட்சியில் தவறுகளை மறைப்பதற்காக பவள விழா பொதுக்கூட்டம் நடத்தப்படுகிறது. 2 ஆண்டுகளாக தலைவாசல் கால்நடை பூங்காவை திறக்கவில்லை. ஒரு செங்கல்லை தூக்கிக் கொண்டு ஊர் ஊராகச் சென்று பிரசாரம் செய்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஒரு லட்சம் செங்கல்லைக் கொண்டு கட்டப்பட்ட கால்நடை பூங்காவை திறக்காமல் முடக்கி இருப்பது விவசாயிகளுக்கு செய்யும் விரோதம்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

Last Updated : 1 hours ago
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.