தமிழ்நாடு

tamil nadu

ஸ்ரீவைகுண்டம் கூட்டுறவு வங்கி விபத்து; சம்பவ இடத்தில் அதிகாரிகள் ஆய்வு!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 14, 2024, 4:06 PM IST

Published : Aug 14, 2024, 4:06 PM IST

அரசு அதிகாரிகள் ஆய்வு
அரசு அதிகாரிகள் ஆய்வு (Credits - ETV Bharat Tamil Nadu)

தூத்துக்குடி: ஸ்ரீவைகுண்டம் முத்தாரம்மன் கோவில் தெருவில் செயல்பட்டு வரும் தூத்துக்குடி மாவட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு அனைத்து பணியாளர் சிக்கன நாணய சங்கத்தில் கீழப்புதுகுடியைச் சேர்ந்த ஸ்ரீதரன் ( 52) என்பவர் செயலாளராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில், நேற்று அலுவலக கம்ப்யூட்டரில் உள்ள பேட்டரி வெடித்தது.

பின்னர், வங்கி முழுவதும் பற்றிய தீயால் பாதிக்கப்பட்ட ஸ்ரீதரன் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த நிலையில்,இன்று மாவட்ட இணை பதிவாளர் முரளி கண்ணன் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, சில முக்கிய ஆவணங்கள் முற்றிலும் எரிந்துள்ளதாகவும், சில ஆவணங்கள் முழுமையாக கிடைத்துள்ளதாகவும், சிசிடிவி காட்சிகள் கிடைத்தால் அதையும் ஆய்வு செய்யப் போவதாகவும், தங்க நகைகள் ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும், முழுமையான ஆய்வுக்குப் பின்னரே தற்கொலையா அல்லது வேறு ஏதேனும் காரணமாக என தெரிய வரும் என தெரிவித்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details