தமிழ்நாடு

tamil nadu

திருவாரூரில் ரயிலில் அடிபட்டு இளைஞர் உயிரிழப்பு.. போலீசார் விசாரணை!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 2, 2024, 3:15 PM IST

ரயிலில் அடிபட்டு உயிரிழந்த இளைஞர்
ரயிலில் அடிபட்டு உயிரிழந்த இளைஞர் (Credit - Etv Bharat Tamil Nadu)

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் உள்ள புதூர் தெற்கு தெருவைச் சேர்ந்த சங்கர் என்பவரது மகன் மனோஜ் குமார் (23). இவர் கட்டட தொழிலாளராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பு சந்தியா என்பவரை காதலித்து காதல் திருமணம் செய்து, தற்போது சந்தியா 8 மாத கர்ப்பமாக உள்ளார் என கூறப்படுகிறது.

இந்நிலையில், ஆலத்தம்பாடி ரயில்வே நிலையம் அருகில் ரயிலில் அடிபட்டு உடல் நசுங்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக அப்பகுதியில் உள்ள சிலர் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இத்தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், மனோஜ் குமார் தான் ரயிலில் அடிபட்டு உயிரிழந்துள்ளார் என உறுதிசெய்துள்ளனர்.

இதனை அடுத்து, உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், மனோஜ் குமார் ரயிலில் அடிபட்டு உயிரிழந்தது விபத்தா அல்லது தற்கொலையா என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details