தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / snippets

விபத்தில் உயிரிழந்த காவலர் குடும்பத்திற்கு ரூ.20.83 லட்சம் வழங்கிய 2017 பேட்ச் காவலர்கள்!

உயிரிழந்த காவலரின் குடும்பத்தாருக்கு காசோலை
உயிரிழந்த காவலரின் குடும்பத்தாருக்கு காசோலை (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 23, 2024, 9:43 PM IST

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த நேரு தெரு பகுதியைச் சேர்ந்தவர் அண்ணாமலை. இவர் வாணியம்பாடி கிராமிய காவல் நிலையத்தில் இரண்டாம் நிலை காவலராக பணிபுரிந்து வந்தார்.

இந்நிலையில் இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, பணி முடித்துவிட்டு நாட்றம்பள்ளி அருகே வந்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனம் சறுக்கி கீழே விழுந்ததில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இவரது குடும்பத்தினருக்கு உதவும் வகையில், தமிழ்நாடு காவல்துறை 2017 பேட்ச் 'காக்கும் உறவுகள்' சார்பில், 38 மாவட்டங்களில் இருந்து 6,497 காவலர்களும் ஒன்றிணைந்து அண்ணாமலை குடும்பத்தாருக்கு ரூ.20 லட்சத்து 83 ஆயிரத்து 400 மதிப்பிலான காசோலையை, திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தாவிடம் ஒப்படைத்தனர். மேலும், அவரது நினைவாக குடும்பத்தாருக்கு தென்னை மரக்கன்றுகளும் வழங்கப்பட்டன.

ABOUT THE AUTHOR

...view details