ETV Bharat / snippets

காவிரியில் பெருக்கெடுத்த வெள்ளம்.. ஒகேனக்கலில் 12வது நாளாக பரிசல் இயக்க தடை!

ஒகேனக்கல் காவிரி ஆறு
ஒகேனக்கல் காவிரி ஆறு (Credits- ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 23, 2024, 5:40 PM IST

தருமபுரி: தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கடந்த 10 நாட்களாகவே நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வந்தது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று வினாடிக்கு நீர்வரத்து 20 ஆயிரம் கனஅடியாக இருந்தது. இந்நிலையில் இன்று காலை முதல் 12 ஆயிரம் கனஅடி நீர் அதிகரித்து 32 ஆயிரம் கனஅடியாக உள்ளது.

தருமபுரி மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு உட்பட்ட அஞ்செட்டி, கேரட்டி உள்ளிட்ட மலைப் பகுதிகளில் பெய்து வரும் கனமழையின் காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இன்று பன்னிரண்டாவது நாளாக பரிசல் இயக்க தடை விதிக்கப்பட்டதால் ஒகேனக்கல்லுக்கு வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

தருமபுரி: தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கடந்த 10 நாட்களாகவே நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வந்தது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று வினாடிக்கு நீர்வரத்து 20 ஆயிரம் கனஅடியாக இருந்தது. இந்நிலையில் இன்று காலை முதல் 12 ஆயிரம் கனஅடி நீர் அதிகரித்து 32 ஆயிரம் கனஅடியாக உள்ளது.

தருமபுரி மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு உட்பட்ட அஞ்செட்டி, கேரட்டி உள்ளிட்ட மலைப் பகுதிகளில் பெய்து வரும் கனமழையின் காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இன்று பன்னிரண்டாவது நாளாக பரிசல் இயக்க தடை விதிக்கப்பட்டதால் ஒகேனக்கல்லுக்கு வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.