திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த 13 வயது பள்ளி மாணவி ஒருவரை, அதே பகுதியைச் சேர்ந்த 70 வயது முதியவர் காலை சிற்றுண்டி வாங்கித் தருவதாகக் கூறி, மறைவான நிலப்பகுதிக்கு அழைத்துச் சென்று சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
Published : Sep 22, 2024, 8:08 AM IST
திருப்பத்தூரில் 13 வயது பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை; 70 வயது முதியவர் கைது!
கோப்புப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)
பின்னர் இதுகுறித்து, பள்ளி மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்த நிலையில், அந்த மாணவியை அவரது பெற்றோர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அதனைத் தொடர்ந்து, அம்மாணவியின் பெற்றோர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 70 வயது முதியவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.