தமிழ்நாடு

tamil nadu

வேலூரில் தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்த 3 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 22, 2024, 2:12 PM IST

Published : May 22, 2024, 2:12 PM IST

கைது செய்யப்பட்ட மூவர் புகைப்படம்
கைது செய்யப்பட்ட மூவர் புகைப்படம் (Credit - ETV Bharat Tamil Nadu)

வேலூர்: வேலூர் மாவட்ட எஸ்.பி மணிவண்ணன் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் தொடர் குற்றச்செயல்களில் ஈடுபடும் நபர்கள் குண்டர் தடுப்புக் காவலில் அடைக்கப்பட்டு வருகின்றனர். இதனையடுத்து சத்துவாச்சாரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தொடர் கள்ளச்சாராய குற்றங்களில் ஈடுபட்டு வந்த பிரேம் (எ) வீச்சி தினேஷ் (37) சத்துவாச்சாரி, அஜித் (எ) சரண்ராஜ் (22) மற்றும் ஜெயபிரகாஷ் (24) ஆகியோர் மீது குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் பரிந்துரை செய்தார்.

அதன்படி மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி மூவரையும் குண்டர் சட்டத்தின் கீழ் சேலம் மத்திய சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பித்தார். உத்தரவு ஆணைக்கான நகலினை சத்துவாச்சாரி காவல்ஆய்வாளர் ராஜா சேலம் மத்திய சிறையில் ஒப்படைத்தார்.

ABOUT THE AUTHOR

...view details