சென்னை:பெரம்பூர் குருமூர்த்தி கார்டன் தெருவில் வசித்து வருபவர் தமிழ்மணி (47). இவர் 3 பசு மாடுகள் மற்றும் 3 கன்றுக்குட்டிகளை வைத்து பால் வியாபாரம் செய்து வருகிறார். இன்று மாலை வீட்டிற்கு எதிரே உள்ள உள்ள காலி இடத்தில் 3 பசு மாடுகளையும் கட்டிவிட்டு சென்றுள்ளார். இந்நிலையில், மாடுகள் கட்டப்பட்டிருந்த இடத்திற்கு அருகில் இருந்த மாநகராட்சி பள்ளி சுற்றுச்சுவர், மழையின் காரணமாக இடிந்து விழுந்துள்ளது. இதில், அப்பகுதியில் கட்டப்பட்ட மூன்று மாடுகளும் உயிரிழந்துள்ளது.
சென்னையில் மாநகராட்சி பள்ளி சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 3 பசு மாடுகள் உயிரிழப்பு..!
Published : 5 hours ago
சுற்றுச்சுவர் இடிந்த பகுதி (Photo Credits - ETV Bharat Tamil Nadu)
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த செம்பியம் தீயணைப்பு துறையினர் மற்றும் காவல்துறையினர் இது குறித்து மாநகராட்சி அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, மாநகராட்சி அதிகாரிகள் இறந்த 3 மாடுகளையும் அப்புறப்படுத்தினர். தொடர்ந்து, இச்சம்பவம் குறித்து செம்பியம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.