தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / snippets

சென்னையில் மாநகராட்சி பள்ளி சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 3 பசு மாடுகள் உயிரிழப்பு..!

By ETV Bharat Tamil Nadu Team

Published : 5 hours ago

சுற்றுச்சுவர் இடிந்த பகுதி
சுற்றுச்சுவர் இடிந்த பகுதி (Photo Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை:பெரம்பூர் குருமூர்த்தி கார்டன் தெருவில் வசித்து வருபவர் தமிழ்மணி (47). இவர் 3 பசு மாடுகள் மற்றும் 3 கன்றுக்குட்டிகளை வைத்து பால் வியாபாரம் செய்து வருகிறார். இன்று மாலை வீட்டிற்கு எதிரே உள்ள உள்ள காலி இடத்தில் 3 பசு மாடுகளையும் கட்டிவிட்டு சென்றுள்ளார். இந்நிலையில், மாடுகள் கட்டப்பட்டிருந்த இடத்திற்கு அருகில் இருந்த மாநகராட்சி பள்ளி சுற்றுச்சுவர், மழையின் காரணமாக இடிந்து விழுந்துள்ளது. இதில், அப்பகுதியில் கட்டப்பட்ட மூன்று மாடுகளும் உயிரிழந்துள்ளது.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த செம்பியம் தீயணைப்பு துறையினர் மற்றும் காவல்துறையினர் இது குறித்து மாநகராட்சி அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, மாநகராட்சி அதிகாரிகள் இறந்த 3 மாடுகளையும் அப்புறப்படுத்தினர். தொடர்ந்து, இச்சம்பவம் குறித்து செம்பியம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details