ETV Bharat / state

அதிமுக கூட்டணிக்கு கம்யூனிஸ்ட்டுகள் போவார்களா?- முத்தரசன் அளித்த விளக்கம்!

சாம்சங் பிரச்சினையில் முதலமைச்சர், அமைச்சர்கள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலையிட்டுள்ளது. இரண்டு நாட்களில் மிக சுமுகமான முடிவு எட்டப்படும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : 3 hours ago

கம்யூனிஸ்ட் கட்சி முத்தரசன்
கம்யூனிஸ்ட் கட்சி முத்தரசன் (Photo Credits - ETV Bharat Tamil Nadu)

திண்டுக்கல்: தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் கவிஞர் தமிழ் ஒளி நூற்றாண்டு நிறைவு கலை விழா நிகழ்வு திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் மஹாலில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் இரா.முத்தரசன், திண்டுக்கல் திமுக கிழக்கு மாவட்ட செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி.செந்தில்குமார், திண்டுக்கல் மாநகராட்சி மேயர் இளமதி ஜோதி பிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் தேவராட்டம், அம்மன், காந்தாரா, கருப்பசாமி போன்ற வேடங்கள் அணிந்து மூடநம்பிக்கைகளை களைய வேண்டி நாடகங்கள் நடத்தப்பட்டன. பின்னர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் இரா.முத்தரசன் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது, “தமிழ்நாட்டில் மூட பழக்கவழக்கங்கள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. சாமியார்களிடம் வசதி வாய்ப்பு உள்ள பிள்ளைகளை யோகா என்ற பெயரில், பயிற்சி என்ற பெயரில் மிக மோசமாக நடத்திக் கொண்டு இருக்கின்றனர்.

முத்தரசன் பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

திசை திருப்ப முயற்சி: திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு, மனிதக் கொழுப்பு, மீன் கொழுப்பு என பிரச்சாரம் செய்து மக்களை திசை திருப்புகிறார்கள். பழனி பஞ்சாமிர்தத்தில் மாட்டுக் கொழுப்பு என கூறி ஒருவர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்துள்ளார். மக்களுக்கு தேவையான பல பிரச்சனைகள் உள்ளது. அதனை திசை திருப்புவதற்காக நடத்தப்படுகிறது.

நிதி வழங்கவில்லை: தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு கொடுக்க வேண்டிய நிதியை கொடுக்கவில்லை. ரூ.7000 கோடி மட்டுமே நிதி கொடுத்துள்ளனர். உத்தரப்பிரதேசம் மாநிலத்திற்கு ரூ.33 ஆயிரம் கோடி கொடுக்கப்பட்டுள்ளது. கல்வித்துறைக்கு ரூ.5 ஆயிரத்து 263 கோடி நிதியை கொடுக்கவில்லை. ஆசிரியர்கள் உண்ணாவிரதம் இருந்தனர்.

இதையும் படிங்க: 40 வருடக் கனவுத் திட்டமான "சென்னம்பட்டி கால்வாய்" - ஆய்வு செய்த அமைச்சர் தங்கம் தென்னரசு!

முதலமைச்சர் பிரதமரை சந்திக்க டெல்லி சென்று மூன்று கோரிக்கைகளை முன் வைத்தார். மெட்ரோ, கல்வி நிதிகளை ஒதுக்க வேண்டும் என்றும், மீனவர் பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். மெட்ரோ திட்டத்திற்காக பணம் ஒதுக்கீடு செய்துள்ளனர். ஆனால், கல்விக்கு நிதி ஒதுக்கவில்லை.தமிழ்நாடு ஆசிரியர்களுக்கு சம்பளம் இல்லை. பணியாளர்களுக்கு சம்பளம் இல்லை என்ற நிலை நீடிக்கிறது

மீனவர்கள் பிரச்சனை: மீனவர்கள் பிரச்சனை தீராமல் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர். இலங்கை கடற்படையினரால் மட்டுமல்லாமல் இலங்கை கொள்ளையர்களாலும் மீனவர்கள் துன்பப்படுத்தப்படுகிறார்கள். மீனவர்கள் வலைகள் கொள்ளையடிக்கப்படுகிறது. இதனை மறைப்பதற்காக பல்வேறு பிரச்சினைகளை ஏற்படுத்தி தப்பிப்பதற்காக முயற்சிகளை மேற்கொள்கிறார்கள்.

சாம்சங் தொழிலாளர்: சாம்சங் தொழிலாளர் பிரச்சனை நாளை அல்லது நாளை மறுநாள் சுமுகமாக முடியும். தமிழக அரசு தலையிட்டுள்ளது. முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் நாங்களும் தலையிட்டு இருக்கிறோம். எனவே சுமுகமான முறையில் முடிவடையும்.

அதிமுக கூட்டணிக்கு கம்யூனிஸ்ட்டுகள்: திமுக கூட்டணியில் உள்ளவர்கள் அதிமுக கூட்டணிக்கு வந்துவிடுவார்கள் என திண்டுக்கல் சீனிவாசன் கனவு காண்கிறார். அது அவரின் உரிமை. அதில், நான் தலையிட முடியாது. கனவுகள் யார் வேண்டுமானாலும் காணலாம். திண்டுக்கல் சீனிவாசன் பகலிலோ, இரவிலோ கனவு கண்டாரா என தெரியவில்லை. அதை நான் கலைக்க விரும்பவில்லை" என தெரிவித்தார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

திண்டுக்கல்: தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் கவிஞர் தமிழ் ஒளி நூற்றாண்டு நிறைவு கலை விழா நிகழ்வு திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் மஹாலில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் இரா.முத்தரசன், திண்டுக்கல் திமுக கிழக்கு மாவட்ட செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி.செந்தில்குமார், திண்டுக்கல் மாநகராட்சி மேயர் இளமதி ஜோதி பிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் தேவராட்டம், அம்மன், காந்தாரா, கருப்பசாமி போன்ற வேடங்கள் அணிந்து மூடநம்பிக்கைகளை களைய வேண்டி நாடகங்கள் நடத்தப்பட்டன. பின்னர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் இரா.முத்தரசன் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது, “தமிழ்நாட்டில் மூட பழக்கவழக்கங்கள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. சாமியார்களிடம் வசதி வாய்ப்பு உள்ள பிள்ளைகளை யோகா என்ற பெயரில், பயிற்சி என்ற பெயரில் மிக மோசமாக நடத்திக் கொண்டு இருக்கின்றனர்.

முத்தரசன் பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

திசை திருப்ப முயற்சி: திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு, மனிதக் கொழுப்பு, மீன் கொழுப்பு என பிரச்சாரம் செய்து மக்களை திசை திருப்புகிறார்கள். பழனி பஞ்சாமிர்தத்தில் மாட்டுக் கொழுப்பு என கூறி ஒருவர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்துள்ளார். மக்களுக்கு தேவையான பல பிரச்சனைகள் உள்ளது. அதனை திசை திருப்புவதற்காக நடத்தப்படுகிறது.

நிதி வழங்கவில்லை: தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு கொடுக்க வேண்டிய நிதியை கொடுக்கவில்லை. ரூ.7000 கோடி மட்டுமே நிதி கொடுத்துள்ளனர். உத்தரப்பிரதேசம் மாநிலத்திற்கு ரூ.33 ஆயிரம் கோடி கொடுக்கப்பட்டுள்ளது. கல்வித்துறைக்கு ரூ.5 ஆயிரத்து 263 கோடி நிதியை கொடுக்கவில்லை. ஆசிரியர்கள் உண்ணாவிரதம் இருந்தனர்.

இதையும் படிங்க: 40 வருடக் கனவுத் திட்டமான "சென்னம்பட்டி கால்வாய்" - ஆய்வு செய்த அமைச்சர் தங்கம் தென்னரசு!

முதலமைச்சர் பிரதமரை சந்திக்க டெல்லி சென்று மூன்று கோரிக்கைகளை முன் வைத்தார். மெட்ரோ, கல்வி நிதிகளை ஒதுக்க வேண்டும் என்றும், மீனவர் பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். மெட்ரோ திட்டத்திற்காக பணம் ஒதுக்கீடு செய்துள்ளனர். ஆனால், கல்விக்கு நிதி ஒதுக்கவில்லை.தமிழ்நாடு ஆசிரியர்களுக்கு சம்பளம் இல்லை. பணியாளர்களுக்கு சம்பளம் இல்லை என்ற நிலை நீடிக்கிறது

மீனவர்கள் பிரச்சனை: மீனவர்கள் பிரச்சனை தீராமல் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர். இலங்கை கடற்படையினரால் மட்டுமல்லாமல் இலங்கை கொள்ளையர்களாலும் மீனவர்கள் துன்பப்படுத்தப்படுகிறார்கள். மீனவர்கள் வலைகள் கொள்ளையடிக்கப்படுகிறது. இதனை மறைப்பதற்காக பல்வேறு பிரச்சினைகளை ஏற்படுத்தி தப்பிப்பதற்காக முயற்சிகளை மேற்கொள்கிறார்கள்.

சாம்சங் தொழிலாளர்: சாம்சங் தொழிலாளர் பிரச்சனை நாளை அல்லது நாளை மறுநாள் சுமுகமாக முடியும். தமிழக அரசு தலையிட்டுள்ளது. முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் நாங்களும் தலையிட்டு இருக்கிறோம். எனவே சுமுகமான முறையில் முடிவடையும்.

அதிமுக கூட்டணிக்கு கம்யூனிஸ்ட்டுகள்: திமுக கூட்டணியில் உள்ளவர்கள் அதிமுக கூட்டணிக்கு வந்துவிடுவார்கள் என திண்டுக்கல் சீனிவாசன் கனவு காண்கிறார். அது அவரின் உரிமை. அதில், நான் தலையிட முடியாது. கனவுகள் யார் வேண்டுமானாலும் காணலாம். திண்டுக்கல் சீனிவாசன் பகலிலோ, இரவிலோ கனவு கண்டாரா என தெரியவில்லை. அதை நான் கலைக்க விரும்பவில்லை" என தெரிவித்தார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.