தமிழ்நாடு

tamil nadu

கூடலூர் அருகே நண்பர்களுடன் ஆற்றில் குளிக்கச் சென்ற இளைஞர் உயிரிழப்பு! - gudalur youth death

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 30, 2024, 8:30 PM IST

Gudalur youth death: நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே ஆற்றில் குளிக்கச் சென்ற இளைஞர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

gudalur youth death
gudalur youth death

நீலகிரி: நீலகிரி மாவட்டம், கூடலூர் எஸ்.எஸ்.நகர் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (38). இவர் இன்று (மார்ச் 30) குண்டபுழா வனத்தை ஒட்டிய புன்னம்புழா பகுதியில் உள்ள ஆற்றில் குளிக்க, தனது ஏழு நண்பர்களுடன் சென்றுள்ளார். அப்போது, அவர்கள் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தபோது, மணிகண்டன் எதிர்பாராத விதமாக ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், அவரது நண்பர்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலின் பேரில், தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று, வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட மணிகண்டனை தேடி வந்தனர். சுமார், 7 மணி நேரம் தேடுதலுக்குப் பிறகு, மணிகண்டன் சடலமாக மீட்கப்பட்டார்.

பின்னர், காவல் துறையினர் மணிகண்டனின் உடலை பிரேத பரிசோதனைக்காக, பந்தலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக, காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆற்றில் குளிக்கச் சென்ற நபர், ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்துள்ளது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: “சங்பரிவார் அமைப்புகளின் கட்சி அலுவலகமாக தேர்தல் ஆணையம்” - பானை சின்னம் கிடைத்த பிறகு திருமாவளவன் சாடல்! - Thirumavalavan

ABOUT THE AUTHOR

...view details