சென்னை: துபாயில் இருந்து கொல்கத்தா விமான நிலையத்திற்கு இன்று காலை எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் 274 பயணிகளுடன் புறப்பட்டது. விமானம் கொல்கத்தா விமான நிலையத்தை நெருங்கிய போது அங்கு கடுமையான பனிமூட்டத்துடன் மோசமான வானிலை நிலவியது. இதையடுத்து விமானியை தொடர்பு கொண்ட விமான நிலைய கட்டுபாட்டு அதிகாரிகள் விமானத்தை சென்னை விமானநிலையத்திற்க்கு சென்று தரையிறக்கும்படி அறிவுறுத்தினர்.
இதையடுத்து எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் 274 பயணிகளுடன் இன்று காலை 10 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்தில் வந்து தரை இறங்கியது. இதையடுத்து பயணிகள் அனைவரும் விமானத்திலேயே அமர வைக்கப்பட்டுள்ளனர். பயணிகளுக்கு குடிநீர், சிற்றுண்டி போன்றவை விமானத்துக்குள்ளையே வழங்கப்பட்டன.