தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கஞ்சா விற்பனையாளர்களை அதிரடி கைது செய்யும் தேனி தனிப்படை போலீஸ்! எஸ்.பி வாழ்த்து! - THENI GANJA SEIZED ISSUE

தேனி மாவட்டத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த முக்கிய கஞ்சா விற்பனையாளர் உட்பட ஐந்து நபர்களை பிடித்து சிறையில் அடைத்த காவல்துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவ பிரசாத் பாராட்டு தெரிவித்தார்.

தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம்
தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் (Credits- ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 5, 2024, 3:09 PM IST

தேனி:தேனி மாவட்டத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த முக்கிய கஞ்சா விற்பனையாளர் உள்பட ஐந்து நபர்களை கைது செய்து, அவர்களிடம் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் இந்த வழக்கில் சிறப்பாக செயல்பட்ட தனிப்படை போலீசாருக்கு தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவ பிரசாத் பாராட்டு தெரிவித்துள்ளார்.

தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவ பிரசாத் உத்தரவின் பேரில் மாவட்டத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் விற்பனை செய்யும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய நபர்கள் குறித்து கூடலூர் வடக்கு காவல் ஆய்வாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு தொடர்ந்து போதைப்பொருள் விற்பனை குறித்து கண்காணிக்கப்பட்டு வந்தனர்.

இந்நிலையில், கடலூர் மாவட்டத்தை சேர்ந்த ஆதிதிராவிடர் லென்சி (22), கூடலூரை சேர்ந்த பாண்டியராஜா (46), ஆண்டிப்பட்டியை சேர்ந்த மணிகண்டன் (31), பொன்மணி (20) ஆகிய நபர்கள் தொடர்ந்து கஞ்சா விற்பனை செய்து வந்ததாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், அவர்களைப் பிடித்து சோதனை செய்ததில் அவர்களிடம் 6.6 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இதையும் படிங்க:"கஞ்சா குடிச்சா கவர்மெண்ட் அரெஸ்ட் பண்ணும் தெரியாதா? ஏன் தப்பு பண்ற?" - மகனுக்கு மன்சூர் அலிகான் அட்வைஸ்!

அதேபோல், கடந்த ஆகஸ்ட் மாதம் தேவதானப்பட்டி சோதனைச் சாவடியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுப்பட்டபோது, அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்ததில் 4.75 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, கார் ஓட்டுநர் மணிகண்டன், பன்னீர்செல்வம், ராஜதுரை ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்து சிறையில் அடைக்கப்பட்ட ஐந்து பேர் (ETV Bharat Tamil Nadu)

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஒடிசா மாநிலத்தில் மானஸ்சபாநாயக் என்பவரிடமிருந்து கஞ்சா வாங்கி வந்து விற்பனை செய்ததாக தெரிவித்தனர். இந்நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவப்பிரசாத் உத்தரவின் பேரில் கம்பம் வடக்கு காவல் ஆய்வாளர் பார்த்திபன் தலைமையில் தனிப்படையினர் ஒடிசா சென்று மானஸ்சபாநாயக் என்பவரை கைது செய்து, தேனி மாவட்டத்திற்கு அழைத்து வந்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், கஞ்சா வழக்குகளில் கைது செய்யப்பட்ட ஐந்து நபர்கள் மீது குண்டாஸ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவ பிரசாத் பாராட்டு தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details