தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"பிளாட்பாரத்தில் வைக்கப்பட்ட உடல்; நெரிசலே உயிரிழப்புக்கு காரணம்" - உறவினர்கள் பரபரப்பு குற்றச்சாட்டு!

சென்னை மெரினா விமான சாகச நிகழ்ச்சியின் போது உயிரிழந்தவரின் உடலை பிளாட்பாரத்தில் வைத்து இருந்தனர் என பாதிக்கப்பட்ட உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

By ETV Bharat Tamil Nadu Team

Published : 4 hours ago

உறவினர்கள் மற்றும்  மெரினாவில் மயக்கமடைந்தவரை தூக்கிச் செல்லும் காட்சி
உறவினர்கள் மற்றும் மெரினாவில் மயக்கமடைந்தவரை தூக்கிச் செல்லும் காட்சி (Photo Credits- ETV Bharat Tamil Nadu)

சென்னை:இந்திய விமானப்படையின் 92-வது ஆண்டு விழாவையொட்டி, சென்னை மெரினா கடற்கரையில் விமான சாகசங்கள் நடைபெற்றன. இதனை பார்க்க வருகை தந்த 5 நபர்கள் உயிரிழந்தனர். இவர்கள் வெயிலின் தாக்கம் காரணமாக உயிரிழந்ததாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் அரசு எந்தப் போதிய அடிப்படை வசதிகளையும் செய்து தரவில்லை. ஆனால் அமைச்சர் முன்னுக்கு பின் முரணான விஷயங்களை கூறி பேட்டி அளித்துள்ளார் என உயிரிழந்த நபரின் உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில், விமான சாகச நிகழ்ச்சியை பார்க்க வருகை தந்து உயிரிழந்த ஜான்(56) என்பவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

உறவினர்கள் பேட்டி (Credits- ETV Bharat Tamil Nadu)

அவரது உடலை முறைப்படி பெற்றுக்கொள்ள அவரது மகன் நரேந்திரன், உறவினர் சரத் மற்றும் நண்பர் ஜெஸ்டின் ஆகியோர் வந்திருந்தனர். பின்னர் ஈடிவி பாரத் செய்தி ஊடகத்திற்கு அவர்கள் அளித்த பேட்டியில் கூறியதாவது, "குடும்பத்துடன் விமான சாகச நிகழ்ச்சி பார்க்க வேண்டும் என வருகை புரிந்தோம். இதில் போதிய குடிநீர் வசதி இல்லாமல் வெயிலில் நின்றதால் எனது தந்தை உயிரிழந்து விட்டார். எங்கள் குடும்பத்திற்கு அனைத்துமாய் இருந்தவர் என் அப்பா. தற்போது தாத்தா எங்கே? என்று பேர குழந்தைகளும் கேட்கின்றனர். நாங்கள் என்ன பதில் சொல்வோம். நேற்று இறந்தவரின் உடலை இப்போது வரை பிரேத பரிசோதனை செய்யவில்லை. அவரது உடலை பிளாட்பாரத்தில் படுக்க வைத்திருந்தனர்" என உயிரிழந்த ஜான் மகன் நரேந்திரன் தெரிவித்தார்.

இதையும் படிங்க:விமான சாகச நிகழ்ச்சி: ஐந்து பேர் இறப்புக்கு என்ன காரணம்? - அமைச்சர் மா சுப்பிரமணியன் விளக்கம்!

மேலும், "2 மணிக்கு உயிரிழந்தவரை உடலை எடுத்துச் செல்ல ஆம்புலன்ஸ் 3 மணிக்கு வந்ததாகவும் போக்குவரத்து நெரிசல் காரணமாக நான்கு மணிக்கு ஓமந்தூரார் மருத்துவமனை வந்துள்ளது. அரசு எந்தப் போதிய அடிப்படை வசதிகளையும் செய்து தரவில்லை. காலையில் அமைச்சர் முன்னுக்கு பின் முரணான விஷயங்களைக் கூறி பேட்டி அளித்தார். மக்களுக்கு தேவையான வசதிகளை செய்து தர முடியாவிட்டால் இது போன்ற நிகழ்ச்சிகளை நடத்தாதீர்கள்" என அவரது உறவினர் சரத் தெரிவித்தார்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்

முதலமைச்சரும் அவரது குடும்பத்தினரும் ஒரு நிழற்குடைக்கு கீழ் ஏசிக்கு பக்கத்தில் வெயில் தாக்காத வகையில் கண்ணாடி அணிந்து கொண்டு நிகழ்ச்சியைக் கண்டு களிக்கிறார்கள். ஆனால் பொதுமக்கள் கூட்ட நெரிசலில் சிக்கி தண்ணீர் கூட இல்லாமல் பொதுமக்கள் கஷ்டப்பட்டுள்ளனர்.

நேற்று இறந்தவரின் உடலை இப்போது வரை கொடுக்கவில்லை; காலையிலிருந்து காவல் நிலையத்தில் இருக்கிறோம் டைப்ரைட்டர் வரவில்லை என அலட்சியமாக பதில் கூறுகின்றனர். சரியான திட்டமிடல் இல்லாமல் இந்த நிகழ்ச்சியை நடத்தப்பட்டிருக்கிறது. தாங்கள் நன்றாகத்தான் ஆட்சி நடத்துகிறோம் எனக் கூறும் திமுக வாக்களித்த மக்களுக்கு ஒன்றும் செய்யவில்லை" என ஜஸ்டின் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details