தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தேனியில் சிறை கைதி தப்பியோட்டம்! குற்றவாளியை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிரம் - Prisoner Vijayakumar escapes

Prisoner Escaped: 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட நபர் மற்றொரு வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட போது தப்பியோடிய சம்பவம் தேனியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Prisoner escape from court in theni
சிறை தண்டனை கைதி தப்பியோட்டம்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 2, 2024, 11:46 AM IST

தேனி:தேனி மாவட்டம் கம்பம் பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் என்ற இளைஞருக்கு, சிறுவனை பாலியல் ரீதியாக துன்புறுத்தி அடித்து தாக்கிய வழக்கில் ஜன.31ஆம் தேதி, தேனி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தால் இவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் கம்பம் அருகே கூடலூர் பகுதியில் மற்றொரு வழக்கிற்காக 20 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற விஜயகுமாரை தேனி காவல்துறையினர் மதுரை மத்திய சிறையில் இருந்து இன்று (பிப்.2) தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கு அழைத்து வந்தனர். அங்கு வழக்கு விசாரணைக்குப் பின்பு விஜயகுமாரை நீதிமன்றத்திற்கு வெளியே அழைத்து வந்துள்ளனர். அப்போது விஜயகுமார் தனக்கு டீ வேண்டும் எனக் கேட்ட நிலையி, நீதிமன்றத்திற்கு முன்பாக உள்ள டீக்கடைக்கு அழைத்துச் சென்று டீ வாங்கி கொடுத்து விட்டு காவலர்களும் டீ குடித்துள்ளனர்.

இதனிடையே, காவல்துறையினர் ஒருபக்கம் திரும்பி டீ குடித்த சமயத்தில், விஜயகுமார் கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்து தப்பியோடி நீதிமன்றத்திற்கு பின் உள்ள காட்டுக்குள் சென்று மறைந்து கொண்டதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: சிறுவனுக்கு பாலியல் தொல்லை தந்த இளைஞருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை..!

இதனைத்தொடர்ந்து விஜயகுமாரை அழைத்து வந்த காவலர்கள், விஜயகுமாரை விரட்டிச் சென்று பிடிக்க முடியாத சூழ்நிலையில், உடனடியாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு தகவல் தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து, தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் உத்தரவின் பேரில் விஜயகுமாரை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், தப்பியோடிய விஜயகுமாரைத் தேடும் பணியில் தனிப்படை போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ஏற்கனவே, 20 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற கைதி மற்றொரு வழக்கிற்கு ஆஜராக வந்து தப்பியோடிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: மகளைக் கொன்ற தாய் தற்கொலை..முதல் 'ஐஆர்சிடிசி' ஆப் இணையம் மூலம் ரூ.1 லட்சம் அபேஸ்! வரை சென்னை குற்றசெய்திகள்

ABOUT THE AUTHOR

...view details