சென்னை :சென்னை சைதாப்பேட்டை திறந்தநிலை பல்கலைக்கழக அரங்கில், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் 11வது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக வேந்தரும், தமிழ்நாடு ஆளுநருமான ஆர்.என்.ரவி தலைமையில் நடைபெற்றது.
இந்த பட்டமளிப்பு விழாவில், புதிதாக உயர்கல்வித்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள கோவி.செழியன், புதுடெல்லி தேசிய ஆசிரியர் கல்விக் குழுமத்தின் தலைவர் பங்கஜ் அரோரா, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பட்டமளிப்பு விழாவில் நேரில் 66 பேர் முனைவர் பட்டமும், 41 ஆய்வு நிறைஞர்கள் பட்டமும், 4 முதுநிலை கல்வியியல் மற்றும் 21 இளநிலை கல்வியியல் மாணவர்கள் என 48,510 மாணவர்கள் பட்டம் பெற்றனர். நேரில் வராதவர்கள் 40,786. இளநிலை கல்வியியல் 7,716 பேர். முதுநிலை மற்றும் 416 பிஎஸ்சி, பி.எட் பட்டம் பெற்றனர்.