தமிழ்நாடு

tamil nadu

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 5, 2024, 4:54 PM IST

ETV Bharat / state

எஸ்.பி வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கு; லஞ்ச ஒழிப்புத்துறையிடம் கேள்வி எழுப்பிய சென்னை உயர் நீதிமன்றம்! - RS Bharathi

Former Minister S.P.Velumani: டெண்டர் ஒதுக்கீடு முறைகேடு தொடர்பாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணிக்கு நெருக்கமான நிறுவனங்களுக்கு எதிராகக் குற்றப்பத்திரிக்கையைச் சிறப்பு நீதிமன்றத்தில் 2 வாரங்களில் தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Chennai
சென்னை

சென்னை: கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் சென்னை, கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் கோரியதில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறி அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் மற்றும் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இதில் டெண்டர் முறைகேடு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை எஸ்.பி.பொன்னி ஆரம்பக் கட்ட விசாரணை நடத்தித் தாக்கல் செய்த அறிக்கையின் அடிப்படையில் வழக்கை கை விடுவது என அரசு முடிவு செய்தது.

இந்த நிலையில் தமிழகத்தில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தை அடுத்து, முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக டெண்டர் முறைகேடு தொடர்பாகவும், வருமானத்துக்கு அதிகமாக 58 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாகவும் குற்றம் சாட்டி இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அதேபோல் டெண்டரில் தொடர்புடைய நிறுவனங்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டன.

இதையடுத்து தன் மீதான வழக்குகளை ரத்து செய்யக் கோரி எஸ்.பி.வேலுமணி தாக்கல் செய்த வழக்குகளை விசாரித்த உயர்நீதிமன்றம், டெண்டர் பணிகளில் முறைகேடு தொடர்பான புகாரில் எஸ்.பி.வேலுமணி மீதான வழக்கை மட்டும் ரத்து செய்வதாக உத்தரவிட்டது.

இதனைத் தொடர்ந்து எம்.எஸ். கன்ஷ்ட்ரக்சன் இன்ஃப்ரா லிமிடெட், ஆலம் கோல்டு, ஆலயம் ஃபவுண்டேஷன், வைதூரியா ஹோட்டல், கண்ஷ்ட்ரோ மால் ஆகிய நிறுவனங்கள் தங்கள் மீதான வழக்குகளையும் ரத்து செய்யக்கோரி தனித்தனியாகச் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இருப்பதாகக் கூறி ஐந்து நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கைத் தள்ளுபடி செய்தது. மேலும், ஆறு வாரங்களில் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்ய வேண்டும் என லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிட்டது.

இந்நிலையில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத லஞ்ச ஒழிப்புத்துறைக்கு எதிராக அறப்போர் இயக்கம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், நீதிமன்ற உத்தரவின் படி 6 வாரங்களில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படவில்லை. 35 வாரங்கள் கடந்து விட்டது என தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில், குற்றப்பத்திரிக்கை தயாரிக்கும் பணிகள் முடிந்து விட்டது, எண்ணிடும் பணிகள் முடிந்ததும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், 2 வாரங்களில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யும் பணிகளை முடித்துச் சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

இதையும் படிங்க:சென்னை - நாகர்கோவில் இடையே வாரம் மும்முறை வந்தே பாரத் சிறப்பு ரயில் சேவை - Vande Bharat Express

ABOUT THE AUTHOR

...view details