மதுரை: கூடங்குளம் அணுமின் நிலையம் எதிர்ப்பு இயக்கத்தை சேர்ந்த உதயகுமார் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அதில், "நான் கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு இயக்கத்தில் உள்ளேன். நான் நியூ ஜெர்சி பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும் பணிபுரிந்து வந்தேன்.
கூடங்குளத்தில் அமைந்த அணுமின் நிலையத்திற்கு எதிராக பல்வேறு போராட்டங்களை நடத்தியதால், அரசு எங்கள் மீது 248 வழக்குகளை பதிந்தது. அதில், 200க்கும் மேற்பட்ட வழக்குகள் தமிழ்நாடு அரசால் திரும்பப் பெறப்பட்டது. இந்நிலையில் என் மீது குற்ற வழக்கு உள்ளதால் எனது பாஸ்போர்ட் முடக்கப்பட்டது. என்மீது போடபட்ட வழக்கில் இதுவரை எந்த தண்டனையும் வழங்கப்படவில்லை.
எனவே எனது பாஸ்போர்ட்டை திரும்ப ஒப்படைக்க கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, பாஸ்போர்டை திரும்ப பெற்றேன். ஆனால் நான் வெளிநாடுகளுக்கு செல்ல முடியாத வகையில் அனைத்து விமான நிலையங்களிலும் லுக்அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த லுக் அவுட் நோட்டீசை திரும்ப பெறக் கோரி அதிகாரிக்கு மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை.
இந்நிலையில் கடந்த 2022ஆம் ஆண்டு துருக்கி நாட்டில் நடைபெற்ற இதழியல் சர்வதேச மாநாட்டில் கலந்து கொள்ள பாஸ்போர்ட் கோரி வழக்கு தொடர்ந்தேன். இதனையடுத்து நான் வெளிநாடு செல்ல அனுமதி வழங்கி மதுரை உயர்நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவு பிறப்பித்திருந்தது.