மதுரை: கொடைக்கானலைச் சேர்ந்த எட்வின் ஜோசப் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “கொடைக்கானலில் பல சிறிய குன்றுகள் உள்ளன. எனது வட்டக்கானல் கிராமத்தில் 80க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்குள்ளவர்கள் பெரும்பாலும் விவசாய வேலைகளில் ஈடுபட்டுள்ளனர்.
உயர் சக்தி வெடிமருந்துகள் கொண்ட டெட்டனேட்டர்கள் மூலம் குவாரிகளில் தொடர்ந்து வெடித்ததைத் தொடர்ந்து, எங்கள் கிராமத்தில் உள்ள மக்கள் இரவில் தூங்க முடியவில்லை. இதனால் அருகில் உள்ள வீடுகளில் பாதிக்கப்படுகிறது. எனவே குடியிருப்புகளுக்கு அருகே சட்டவிரோதமான முறையில் வெடி வைத்து நடைபெறும் அனுமதியற்ற குவாரிக்கு இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்க வேண்டும். சட்ட விரோதமாக குவாரியில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கூறி உள்ளார்.