தமிழ்நாடு

tamil nadu

போயஸ் கார்டன் வீடு விவகாரம்; தனுஷுக்கு எதிரான வழக்கு முடித்துவைப்பு! - Dhanush House issue

Dhanush House issue: வாடகை வீடு விவகாரத்தில் தலையிட்டதற்காக நடிகர் தனுஷுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், இரு தரப்பினருக்கும் சமரசம் ஏற்பட்டதை அடுத்து வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் முடித்து வைத்தது.

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 13, 2024, 6:23 PM IST

Published : Jun 13, 2024, 6:23 PM IST

Dhanush
தனுஷ் மற்றும் உயர் நீதிமன்றம் (Credits - Dhanush 'X' page and File Image)

சென்னை: சென்னை போயஸ் தோட்டத்தில் நளினா ராமலட்சுமி என்பவருக்குச் சொந்தமான வீட்டில் கடந்த 2022ஆம் ஆண்டு முதல் அஜய் குமார் லுனாவத் என்பவர் வாடகைக்கு வசித்து வந்தார். இந்நிலையில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தங்களது வீட்டுக்கு வந்த நபர்கள், வீட்டை நடிகர் தனுஷ் வாங்கியுள்ளதால் உடனடியாக காலி செய்யக் கூறியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அஜய் குமார் லுனாவத் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அந்த மனுவில், 2024 ஜனவரி வரை ஒப்பந்தம் இருந்த நிலையில், காலி செய்ய மறுத்ததால் வீட்டின் மின் மற்றும் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டதாகவும், முறையாக வாடகை செலுத்தி வந்த நிலையில், எந்த முன்னறிவிப்பும் இன்றி காலி செய்யச் சொன்னது சட்ட விரோதம் என்பதால் வீட்டு விவகாரத்தில் தலையிட நடிகர் தனுஷ் உள்ளிட்டோருக்கு தடை விதிக்க வேண்டுமென கோரப்பட்டது.

இந்த மனு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தனுஷ் காணொலி மூலம் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தார். தனுஷ் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியன், மனுதாரருக்கும், தங்களுக்கும் இடையே சமரசம் ஏற்பட்டு விட்டதாகவும், கடந்த 31ஆம் தேதி வீட்டின் சாவி தங்களிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் கூறினார். இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, நடிகர் தனுஷுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை முடித்து வைத்தார்.

இதையும் படிங்க:நடிகர் பிரதீப் கே விஜயன் வீட்டில் சடலமாக மீட்பு.. திரையுலகினர் சோகம்!

ABOUT THE AUTHOR

...view details