தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நிரம்பி வழிந்த பொன்னை தடுப்பணை! பூக்களை தூவி நதியை வரவேற்ற கிராம மக்கள்!

பொன்னை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட புதிய தடுப்பணையில் நீர் நிரம்பி வழியும் நிலையில், காட்பாடி ஒன்றிய குழு உறுப்பினர் வேல்முருகன் மற்றும் கிராம மக்கள் தடுப்பணையில் பூக்களை தூவி பொன்னை நதியை வரவேற்றனர்.

தடுப்பணையில் பூக்களை தூவி நீரை வரவேற்கும் மக்கள்
தடுப்பணையில் பூக்களை தூவி நீரை வரவேற்கும் மக்கள் (Credits- ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : 5 hours ago

வேலூர்:வேலூர் மாவட்டம் திருவலம் அருகே உள்ள பொன்னை ஆற்றின் குறுக்கே கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் தமிழக அரசின் சார்பில் தடுப்பணை ஒன்று அமைக்கப்பட்டது. இதை நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் திறந்து வைத்தார். இந்நிலையில் கடந்த ஒரு வார காலமாக பொன்னை சுற்றுவட்டார கிராமங்களில் பெய்த கனமழையால் பொன்னை ஆற்றுக்கு வரும் நீர் அந்த தடுப்பணையை முழுவதுமாக நிரப்பியுள்ளது.

இதனால் நிலத்தடி நீர் உயரும் எனவும் விவசாய ஆழ்துளை கிணறுகளின் நீர் மட்டமும் உயரும் என குகையநல்லூர், ஸ்ரீபாத நல்லூர், திருவலம், மேல்பாடி முதல் சோளிங்கர் வரையிலான 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் பயனடைய உள்ளனர். மேலும் இந்த தடுப்பணையில் தேங்கியிருக்கும் நீர் விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் என விவசாயிகள் கூறுகின்றனர். மேலும் இந்த தடுப்பணை குடிநீர் தட்டுபாடு ஏற்படாமல் தவிர்க்கும் எனவும் கிராம மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதையும் படிங்க:மாநாட்டுக்கு அடுத்து என்ன? மேற்கு மண்டலத்தை குறி வைக்கும் தவெக-வின் முடிவு கை கொடுக்குமா?

இதனால் இன்று காட்பாடி ஒன்றிய குழு உறுப்பினர் வேல்முருகன் மற்றும் குகையநல்லூர் ஊராட்சி தலைவர் புவனேஷ்குமார் உள்ளிட்டோரும் சுற்றுவட்டார கிராம மக்களும் ஆர்வமுடன் வந்து நிரம்பிய தடுப்பணையை பார்த்து பூத்தூவி மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். இதே போன்று மேலும் ஒரு தடுப்பணையும் பொன்னை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits- ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறியஇங்கே க்ளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details