தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விருதுகளை வீரமரணமடைந்த ராணுவ வீரர்களுக்கே மத்திய அரசு வழங்க வேண்டும் - கார்த்திக் சிதம்பரம் எம்பி - புதுக்கோட்டை செய்திகள்

Karti Chidambaram MP: இறந்து போனவர்கள் யாருக்கும் விருது வழங்கக் கூடாது என்றும் அவ்வாறு வழங்கினால் அந்த விருதினை வேண்டாம் என்று சொல்லக்கூடிய உரிமை அவர்களுக்கு இல்லாமல் போய்விடும் எனவும் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

Sivaganga MP Karti Chidambaram Press meet
சிவகங்கை எம்பி கார்த்திக் சிதம்பரம்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 12, 2024, 7:33 AM IST

கார்த்திக் சிதம்பரம் எம்பி பேட்டி

புதுக்கோட்டை:புதுக்கோட்டையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் நேற்று (பிப்.11) பங்கேற்ற சிவகங்கை எம்பி கார்த்திக் சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், "பிரதமர் மோடியின் செல்வாக்கு குறித்து நான் கூறிய கருத்திலிருந்து பின்வாங்கப் போவது கிடையாது. நான் கூறிய கருத்தில் எந்த தவறும் இல்லை.

வட இந்தியாவில் மோடிக்கு என்று தனி செல்வாக்கு உள்ளது. தென்னிந்தியாவில், அவருக்கு அதே செல்வாக்கு குறைவு. காங்கிரஸ் கட்சியில் இருந்து எனக்கு விளக்கம் கேட்டு எவ்விதமான நோட்டீஸும் வரவில்லை. நான் சொன்ன கருத்தில் பிழை இருப்பதாகத் தெரியவில்லை. நான் சிந்தித்துதான் கருத்து சொல்கிறேன்; நான் இதுவரை பேசிய எந்த கருத்திலும் தவறில்லை. மனசாட்சிக்கு உட்பட்டுத்தான் பேசியுள்ளேன்.

ராணுவ வீரர்களைத் தவிர வேறு யாருக்கும் விருது தரக்கூடாது: எனக்கு நோட்டீஸ் எதுவும் வரவில்லை. வந்ததாக செய்தி வந்தது, வதந்தியே. விளக்க நோட்டீஸ் அனுப்பினால், பதிளிளிக்க நான் தயாராக உள்ளேன். சிவகங்கை தொகுதியைப் பொறுத்தவரையில், ஒரு அரசியல் கட்சி என்று இருந்தால் பலருக்கும் பல கருத்து இருக்கத்தான் செய்யும்' என்றார். தொடர்ந்து பேசிய அவர், என்னைப் பொறுத்தவரையில், உயிரிழந்தவர்கள் யாருக்குமே விருது கொடுக்கக்கூடாது. அதேபோல, வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களைத் தவிர வேறு யாருக்கும் கொடுக்கக்கூடாது.

காங்கிரஸ் ஆட்சியில் நீட் விவகாரத்தில் மாநில அரசுகளுக்கே உரிமை: விருது பெற்றவர்களை நான் குறைவாக மதிப்பிடவில்லை. அதேவேளையில், அந்த விருதினை வேண்டாம் என்று சொல்லக்கூடிய உரிமை அவர்களுக்கு இல்லாமல் போய்விடும். மனசாட்சிபடி நான் யாரையும் ஒதுக்காமல், கடந்த 5 ஆண்டுகளாக நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றி உள்ளேன். நீட் விவகாரத்தில் (NEET Exam) காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், நீட் வேண்டுமா? வேண்டாமா? என்று முடிவு எடுக்கும் உரிமையை மாநில அரசுக்கே வழங்குவோம்.

கட்சி எடுக்கும் முடிவை ஏற்றுக்கொள்ள நான் தயாராக உள்ளேன். கட்சி சீட் கொடுத்தால் நிற்பேன். எந்த தொகுதியில் நிற்க சொன்னாலும் நிற்பேன். கட்சி எடுக்கும் அனைத்து முடிவுகளுக்கும் கட்டுப்படுவேன். கருத்துக்கணிப்பை நம்ப முடியாது. ஒரு சிறிய அளவு சாம்பிளை (Sample) வைத்து, ஒட்டுமொத்த மக்களும் இதே கருத்தில் தான் உள்ளனர் என்று கூற முடியாது.

திமுக கூட்டணி 39 தொகுதிகளிலும் வெற்றி உறுதி:என்னை பொறுத்தவரை எதிர்க்கட்சிகள் அனைவரும் ஒன்றிணைந்து பாஜக செய்யும் தவறுகளை பொதுமக்களிடம், குறிப்பாக வட இந்தியாவில் எடுத்துக் கூறினால் பாஜகவை எளிதாக வெல்ல முடியும். தென்னிந்தியாவைப் பொறுத்த வரை, குறிப்பாக தமிழ்நாட்டில் திமுக கூட்டணி 39 தொகுதிகளிலும் வெற்றி பெறுவது உறுதி. இந்த கூட்டணியில் இருந்து எந்த ஒரு கட்சியும் பிரிந்து போவதற்கு வாய்ப்பு கிடையாது' எனத் தெரிவித்துள்ளார்.

பூரண மதுவிலக்கிற்கு சாத்தியமில்லை:மேலும் பேசிய கார்த்திக் சிதம்பரம் எம்பி, 'தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு என்பது சாத்தியம் கிடையாது. கடைகளைக் குறைக்கவும், திறக்கும் நேரத்தை குறைக்கவும் முடியுமே தவிர, பூரண மதுவிலக்கு என்பது முடியாத காரியம். அவ்வாறு செய்தால் கள்ளச்சந்தையில் மது விற்பனை அதிக அளவில் வளர்ந்து விடும். பீகாரில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டாலும், காந்தி பிறந்த போர் பந்தரிலே மது கள்ளச்சந்தையில் அதிகளவு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

நடிகர் விஜய் அரசியல்:'ஒரு கட்சியின் தேசிய தலைவர் தமிழ்நாட்டிற்கு வரலாம். அதனால் அந்த கட்சி வளர்ந்து விடும் என்று கூறுவது தவறு. என்றைக்குமே பாஜக தமிழ்நாட்டில் வளர முடியாது. நடிகர் விஜய் அரசியல் கட்சியை தொடங்குவதாக கூறியுள்ளார். ஆனால் அவருடைய கொள்கைகள், செயல்பாடுகள் குறித்து இதுவரை அவர் வெளியிடவில்லை. அவைகள் வெளியிட்டால் மட்டுமே இது குறித்து கருத்துக்கூற முடியும்.

தமிழ்நாட்டில் இளைய தலைமுறையினர், குறிப்பாக விஜய், விஷால், உதயநிதி ஸ்டாலின், அண்ணாமலை மற்றும் உங்களைப் போன்றோர் கையில் தான் வருங்கால தமிழ்நாடு அரசியல் உள்ளதாக கருதலாமா? என்ற கேள்விக்கு, அரசியலாக இருந்தாலும் சரி, மற்ற சமுதாய நிகழ்வுகளாக இருந்தாலும் சரி, தலைமுறை மாற்றம் என்பது இயல்புதான். அது அந்தந்தக் கட்சிகளைப் பொறுத்தது எனப் பதிலளித்துள்ளார்.

இதையும் படிங்க:உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்; நாடாளுமன்றத் தொகுதிகளில் 3 நாட்கள் திமுக பரப்புரைக் கூட்டம்!

ABOUT THE AUTHOR

...view details