சென்னை:நீலாங்கரை, ஈஞ்சம்பாக்கம், விழுப்புரம், மரக்காணம் உள்ளிட்ட பகுதிகளில் கடல் நீல நிறத்தில் காட்சியளித்ததை மக்கள் வியந்து பார்த்தனர். இதனை புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து தங்களின் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர்.
பாமக தலைவர் அன்புமணி ராமதாசும், தனது எக்ஸ் தளத்தில் கடல் அலைகள் ஜொலித்ததைக் குறிப்பிட்டு பதிவிட்டிருந்தார். அதை படம்பிடித்தும் வீடியோவாக பதிவேற்றியிருந்தார். கடல் அலைகள் நீல நிறத்தில் தாவி வந்ததை மகிழ்ச்சியுடன் கண்டுகளித்ததாக அவர் குறிப்பிட்டிருந்தார்.
நீல நிறத்தில் ஏன் கடல் அலை ஒளிர்கிறது, சிவப்பு நிறத்தில் ஒளிரும் அலைகளில் இருக்கும் ஆபத்துகள் என்ன என்பதை ஓய்வுபெற்ற இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலின் முதன்மை விஞ்ஞானி வி.எஸ். சந்திரசேகர் ஈடிவி பாரத் தமிழ் செய்தியாளருடன் சிலத் தகவல்களைப் பகிர்ந்துகொண்டார். அவர் பகிர்ந்த விவரங்களைக் கீழ்வருமாறுக் காணலாம்.
ஏன் கடல் அலை நீல நிறத்தில் மிளிர்ந்தது?
கடலில் ஏற்படும் நிறமாற்றத்தை சீ கோஸ்ட் (sea ghost), சி ஃபையர் (sea fire), சி ஸ்பார்க்கில் (sea sparkle) எனப் பரவலாக அழைக்கப்படுகிறது. ஆனால் இதற்கு அறிவியல் ரீதியான பெயர்களும், காரணங்களும் இருக்கின்றன. கடலில் தோன்றும் இந்த நிற மாற்றத்தை அறிவியல் பூர்வமாக 'பயோலுமிசென்ஸ்' என அழைக்கின்றனர். இதில் லூமிசென்ஸ் என்றால் ஒளிருவது என்று பொருள்படும். பயோ என்றால் உயிர் தொடர்பான பொருளைக் குறிக்கிறது.
கடலில் ஏற்படும் நீல நிறம் என்பது உயிரிகள் வாயிலாக ஏற்படுத்தக்கூடிய ஒரு ஒளிரும் தன்மையுடன் இருக்கும் வெளிச்சம் ஆகும். நம் கண்களுக்கு விருந்தளிக்கும் மின்மினி பூச்சி போன்று கடலிலும் பல உயிரினங்கள் ஒளிரும் தன்மையில் இருக்கின்றன. மேலும், கடலில் கண்களுக்கு தெரியாத பல ஆயிரக்கணக்கான நுண்ணுயிர்கள் இருக்கிறது.
உண்மையான டெங்கு காய்ச்சலை கண்டறிவதில் உள்ள சிக்கல்? - மருத்துவர் சாந்தி அளித்த விளக்கம்
கடல் நுண்ணுயிரிகள்:
கடலில் இருக்கும் பைட்டோபிளாங்க்டன் எனும் தாவர நுண்ணுயிர் மிதவை போன்ற, கடல் சூழல் மண்டலத்தில் உள்ள மிதவை உயிரிகள், கார்பனை கடலின் மேல் பகுதியில் உள்ள சூரிய ஒளி மண்டல அடுக்கிலிருந்து, கடலின் ஆழத்திற்குக் கொண்டு செல்கிறது.
மைக்ரோஸ்கோப் வாயிலாக பார்க்கப்படும் உயிரினமாக நுண்ணுயிர்கள் இருந்தாலும் கண்ணில் தென்படக்கூடிய அளவில் உள்ள பெரிய தாவர மிதவை நுண்ணுயிர்கள் வகையை சார்ந்ததாகும். நிலத்தில் எப்படி தாவரங்கள் உணவை உற்பத்தி செய்கிறதோ அதேபோல் கடலில் இருக்கும் தாவரங்கள் கடலில் உணவை உற்பத்தி செய்கிறது.