சென்னை:நீலாங்கரை, ஈஞ்சம்பாக்கம், விழுப்புரம், மரக்காணம் உள்ளிட்ட பகுதிகளில் கடல் நீல நிறத்தில் காட்சியளித்ததை மக்கள் வியந்து பார்த்தனர். இதனை புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து தங்களின் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர்.
அந்த வகையில், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், தனது எக்ஸ் தளத்தில் கடல் அலைகள் ஜொலித்ததைக் குறிப்பிட்டு பதிவிட்டிருந்தார். அதை படம்பிடித்தும் வீடியோவாக பதிவேற்றியிருந்தார். கடல் அலைகள் நீல நிறத்தில் தாவி வந்ததை மகிழ்ச்சியுடன் கண்டுகளித்ததாக அவர் குறிப்பிட்டிருந்தார்.
ஏன் கடல் அலை நீல நிறத்தில் மிளிர்ந்தது?
இது பெரும்பாலும் கடல் உயிரினங்களால் நிகழ்கிறது. நீல நிறம் தவிர கடலில் இருக்கும் ஆல்கே மற்றும் தாவரங்களால், கடல் அலைகள் பச்சை நிறத்தில் ஜொலிப்பதுண்டு. அட்லாண்டிக் பெருங்கடலின் பெரும்பாலான இடங்கள் பச்சை நிறத்தில் காணப்படும்.
ஒளிச்சேர்க்கை செய்யும் உயிரினங்களில் குளோரோபில் இருக்கும். இது பச்சை நிறத்தில் தோன்றுவதுடன், சிவப்பு மற்றும் நீல ஒளியையும் வெளிப்படுத்துகிறது.