சென்னை: ஆவடி அடுத்த திருமுல்லைவாயல் 5வது பட்டாலியன் காவல் படையில் பணிபுரிந்து வருபவர், அப்துல் ரஹ்மான். இவர் ஓரின சேர்க்கையாளர்கள் பயன்படுத்தும் செயலி ஒன்றில், கொரட்டூரைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞரை தொடர்பு கொண்டு ஓரினச் சேர்க்கையில் ஈடுபட அழைத்துள்ளார்.
இதன் அடிப்படையில் அந்த இளைஞர், காவலர் அப்துல் ரஹ்மான் கூறியபடி, திருமுல்லைவாயலில் உள்ள காவலர் குடியிருப்புக்கு வந்துள்ளார். அங்கு அப்துல் ரஹ்மானின் குடியிருப்பில் அவரது சகோதரர் மற்றும் 3 நண்பர்கள், அந்த 24 வயது இளைஞருடன் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டுள்ளனர். மேலும், ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்ட அவர்கள், கஞ்சா போதையில் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், அங்கிருந்த காவலர் அப்துல் ரஹ்மான் உள்பட அனைவரும் அந்த இளைஞரை சரமாரியாகத் தாக்கி கொடுமைப்படுத்தியுள்ளனர். மேலும், அந்த இளைஞரிடம் இருந்து மூன்றரை சவரன் தங்க நகை மற்றும் 25,000 ரூபாய் பணத்தினை இணையவழி பணப்பரிவர்த்தனை செயலி மூலம் பெற்றுக் கொண்டு அடித்து துரத்தியுள்ளனர்.