சென்னை: 17வது ஐபிஎல் தொடர் இன்று சென்னையில் கோலாகலமாக துவங்கியது. இந்த சீசனில் துவக்க விழாவில் ஏ.ஆர்.ரஹ்மான், அக்ஷய் குமார், பிரபுதேவா உள்ளிட்ட பல திரை நட்சந்திரங்களும், கிரிக்கெட் ஜாம்பவான்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
முதல் போட்டியில் இன்று சென்னை எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகிறது. சென்னை அணியைப் பொறுத்தவரை ருத்துராஜ் கெய்க்வாட் முதன்முதலில் கேப்டனாக களமிறங்குவதால், புத்துணர்ச்சியுடன் காணப்படும். நடப்பு சாம்பியனான சென்னை அணிக்கு, ஆல் ரவுண்டர் ரச்சின் ரவீந்திரா மற்றும் மிட்சல் ஆகியோரது வருகை பேட்டிங்கிற்கு வலுசேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கேப்டன் பதவிலிருந்து விலகிய தோனி தொடக்க ஆட்டக்காரராக களமிறங்குவார் என தகவல் வெளியாகியுள்ளது. இளம் வீரர் சமீர் ரிஸ்வி மேலும் அணிக்கு வலுசேர்க்கிறார். சிஎஸ்கே அணியில் மொயின் அலி, ரவீந்திரா, சிவம் துபே, ஜடேஜா என பல ஆல் ரவுண்டர்கள் உள்ளனர். பவுலிங்கைப் பொறுத்தவரை சர்துல் தாகூர், ரஹ்மான் ஆகியோரது வருகை முக்கிய பங்கு வகிக்கும்.