தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

பாரீஸ் ஒலிம்பிக் துப்பாக்கிச் சுடுதல்: நூலிழையில் பதக்கத்தை கோட்டை விட்ட அர்ஜூன் பபுதா! - Paris Olympics 2024 - PARIS OLYMPICS 2024

பாரீஸ் ஒலிம்பிக் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவின் இறுதிப் போட்டியில் நூலிழையில் இந்திய வீரர் அர்ஜூன் பபுதா பதக்க வாய்ப்பை கோட்டைவிட்டார்.

Etv Bharat
Arjun Babuta (ANI Photo)

By ETV Bharat Sports Team

Published : Jul 29, 2024, 4:02 PM IST

பாரீஸ்: 33வது ஒலிம்பிக் விளையாட்டு திருவிழா பிரான்ஸ் தலைநகர் பாரீசில் கடந்த ஜூலை 26ஆம் தேதி பிரம்மாண்ட தொடக்க விழாவுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. மூன்றாவது நாளான இன்று (ஜூலை.29) நடைபெற்ற 10 மீட்டர் ஏர் ரைபிள் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்திய வீரர் அர்ஜூன் பபுதா விளையாடினார்.

தொடக்க முதலே அபாரமாக விளையாடி வந்த அர்ஜூன் பபுதா பதக்கத்திற்கான வாய்ப்பில் நீடித்து வந்தார். வெளியேற்றுதல் சுற்றுகளில் முறையே 10.6 மற்றும் 10.8 அதையடுத்து 9.9 மற்றும் 10.6 என அடுத்தடுத்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இரண்டாவது இடத்தில் முன்னிலை வகித்து வந்தார்.

இருப்பினும் தனது 13வது மற்றும் கடைசி முயற்சியில் 9.9 புள்ளிகள் மட்டுமே எடுத்து 4வது இடத்திற்கு தள்ளப்பட்டு வெண்கலப் பதக்கம் வெல்வதற்கான வாய்ப்பை இழந்தார். இதன் மூலம் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்தியாவின் பதக்க கனவு நிராசையாக போனது.

இதையும் படிங்க:பாரீஸ் ஒலிம்பிக் பேட்மிண்டன்: லக்சயா சென், சாத்விக்சாய் - சிராக் ஷெட்டி அபாரம்! மகளிர் பிரிவில் தொடர் பின்னடைவு! - paris olympics 2024

ABOUT THE AUTHOR

...view details