தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / health

தினமும் ஆளி விதைகளை சாப்பிடுவதால் கிடைக்கும் 6 நன்மைகள்..பெண்கள் கட்டாயம் தெரிஞ்சிக்கனும்!

பெண்களுக்கு அதிகம் ஏற்படக்கூடிய மார்பக புற்றுநோய் வராமல் தடுக்கும் ஆற்றலை ஆளி விதைகள் கொண்டுள்ளது. ஆளி விதைகளின் மற்ற நன்மைகளை இந்த செய்தி தொகுப்பின் மூலம் தெரிந்து கொள்ளலாம்..

By ETV Bharat Health Team

Published : 4 hours ago

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credit - ETVBharat)

எள், நிலக்கடலை, தேங்காய் போலவே அளி விதை என்பது எண்ணெய் தன்மை கொண்டது. தாவிர வகைகளில் அதிகப்படியான ஒமேகா 3 அமிலம் மற்றும் நார்ச்சத்தை கொண்டது இந்த ஆளி விதைகள் தான்.

ஆளி விதையில் உள்ள சத்துக்கள்:

  • ஒமோகா 3
  • நார்ச்சத்து
  • கார்போஹைட்ரேட்
  • புரதம்
  • கால்சியம்
  • மெக்னீசியம்
  • பாஸ்பரஸ்
  • பொட்டசியம்
  • ஃபோலேட்

ஆளி விதை பயன்கள்:

1. உடல் எடையை குறைக்கிறது: கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்துகள் (Soluble and Insoluble Fiber) என இரண்டையும் ஆளி விதைகள் கொண்டுள்ளது. இதை உண்பதால், வயிறு நிரம்பிய உணர்வை கொடுப்பதோடு பசி உணர்வை தடுக்கிறது. இதில் உள்ள பைட்டோ ஈஸ்ட்ரோஜனான லிக்னான்ஸ் (Lignans) எனும் ஆன்டியாக்‌ஸிடன்ஸ் உடலில் ஆங்காங்கே இருக்கக்கூடிய தேவையற்ற கொழுப்புகளை வெளியேற்ற உதவியாக இருக்கிறது.

2. இதய அடைப்பை தடுக்கும்: ஆளி விதைகளில், ஒமோகா 3 நல்ல கொழுப்பு அமிலங்கள் அதிகளவில் இருக்கிறது. மீன் சாப்பிடுவதால் கிடைக்கும் சம அளவு சத்துக்களை ஆளி விதைகள் கொண்டுள்ளது. ஒமேகா 3, இதய குழாயில் அடைப்பை ஏற்படுத்தக்கூடிய கெட்ட கொழுப்பை கரைத்து நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கிறது. தினசரி ஆளி விதைகளை உட்கொள்வதால் இருதயம் சார்ந்த பிரச்சனைகளை தடுக்கலாம்.

3. செரிமானம் சீராகும்: இதில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கலை போக்குகிறது. மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்கள், தினசரி ஆளி விதைகளை உட்கொள்வதால், மலக்குடலில் உள்ள மலத்தை மிருதுவாக்கி வெளியேற்றுகிறது. இந்த விதைகளில் உள்ள கரையக்கூடிய நார்ச்சத்து செரிமானத்தை சீராக்குகிறது.

4. கேன்சர் வராமல் தடுக்கும்:இதில் உள்ள ஒமேகா 3 அமிலம் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்டுகள், உடலில் புற்றுநோயை உண்டாக்கக்கூடிய காரணிகளை அழிப்பதோடு, புற்றுநோய் செல்களின் வளர்ச்சியையும் தடுக்கிறது. மேலும், இதில் உள்ள லிக்னான்ஸ், பெண்களின் உடலில் உள்ள ஹார்மோன் அளவை சீராக வைக்க உதவுகிறது. பெண்களுக்கு அதிகம் ஏற்படக்கூடிய மார்பக புற்றுநோய் வராமல் தடுக்கும் ஆற்றலை கொண்டுள்ளது என பல்வேறு ஆய்வுகளில் நிருபிக்கப்பட்டுள்ளது.

5. சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும்: நீண்ட காலங்களாக சர்க்கரை நோயால் அவதிப்படுபவர்கள் ஆளி விதைகளை தினசரி உணவில் சேர்த்து வர மிகவும் நல்லது. இதில் உள்ள லிக்னான்ஸ் மற்றும் நார்ச்சத்து இன்சுலின் சுரப்பை ஒழுங்குப்படுத்துவதோடு, இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை சீராக வைக்கிறது.

6. மாதவிடாய் பிரச்சனை குணமாகும்:பெண்களின் ஹார்மோனை சமநிலையில் வைத்து மாதவிடாய் கோளாறுகளை ஒழுங்கு படுத்துகிறது.

ஆளி விதையை சாப்பிடுவது எப்படி?:

  • ஆளி விதைகளை பொடி செய்து, மோரில் கலந்து காலை மற்றும் மதிய உணவிற்கு இடையே குடித்து வரலாம்.
  • இந்த பொடியை இட்லி, தோசை அல்லது சப்பாத்தி மாவில் கலந்து சாப்பிடலாம்.
  • நாள் ஒன்றுக்கு ஒரு முதல் இரு ஸ்பூன் அளவு மட்டுமே உட்கொள்ள வேண்டும்.
  • மேலும், நீங்கள் தினசரி உணவில் ஆளி விதைகளை உட்கொண்டால் அதிக்கப்படியான தண்ணீர் குடிக்க வேண்டும்.

ஆளி விதையை யார் சாப்பிடக் கூடாது?:கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் மருத்துவர்களின் ஆலோசனைக்கு பின்னர் இதனை உட்கொள்ள வேண்டும்.

பொறுப்புத் துறப்பு: இங்கு, உங்களுக்கு வழங்கப்படும் அனைத்து தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆராய்ச்சி, ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது என்பதை குறிப்பிடுகிறோம்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details