தமிழ்நாடு

tamil nadu

கண் தானம் இவர்கள் எல்லாம் செய்யக்கூடாதா?...பரவும் கட்டுக்கதைகளுக்கு முற்றுப்புள்ளி! - MYTHS AND FACTS ABOUT EYE DONATION

By ETV Bharat Health Team

Published : Aug 23, 2024, 4:23 PM IST

MYTHS AND FACTS ABOUT EYE DONATION: போதிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தால் கண் தானம் பற்றி பல கட்டுக்கதைகள் இன்றளவும் உலா வருகின்றன. அப்படி, கண் தானம் பற்றிய சில கட்டுக்கதைகள் இதோ உங்களுக்காக..

கோப்புப்படம்
கோப்புப்படம் (CREDIT - ETV Bharat Health Team)

சென்னை: தானத்தில் சிறந்த தானம் கண் தானம் (Eye Donation) என்று பலமுறை கேள்விப்பட்டிருப்போம். ஆனால், போதுமான விழிப்புணர்வு இல்லாத காரணத்தால் தினமும் எத்தனையோ சடலங்கள் கண்களோடும், கருவிழிகளோடும் புதைக்கவோ, எரிக்கவோ படுகின்றன. கண் தானம் யாரெல்லாம் செய்யலாம்? யாரெல்லாம் செய்யக்கூடாது? என்ற கேள்வி உங்களுக்குள் எழுந்தால் அதற்கான பதிலை இந்த செய்தி தொகுப்பில் காணலாம்..

கண் தானம் பற்றிய கட்டுக்கதைகள்:

  • உயிரோடு இருக்கும் போதே கண்கள் அகற்றப்படுகிறது
  • முழு கண்களையும் நீக்கி விடுவார்கள்
  • கண் மருத்துவமனையில் மட்டும் தான் கண்களை அகற்றுவார்கள்
  • மதத்தில் அனுமதிக்கப்படுவதில்லை
  • இறுதிச் சடங்கு தாமதமாகும்
  • வயதானவர்கள் உயிரிழந்தால் அவர்களது கண்கள் பயன்படுத்த முடியாது
  • கண்ணாடி உபயோகிப்பவர்கள், கண் அறுவை சிகிச்சை மேற்கொண்டவர்களின் கண்கள் பயன்படாது
  • கண் தானம் கொடுத்தவர்கள் அடுத்த பிறவியில் கண் பார்வை தெரியாதவராகப் பிறப்பார்கள்

கண் தானம் செய்ய முடியாதவர்கள் யார்? :

  • இறப்பிற்கான காரணம் தெரியாமல் உயிரிழந்தவர்களின் கண்கள் சேகரிக்கப்படுவதில்லை.
  • கண் தொற்று அல்லது கண் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் கண் தானம் செய்யமுடியாது

வாழ்நாளில் பின்வரும் நோய்களை கொண்டவர்களின் கண்கள் சேகரிக்கப்படுவதில்லை

  • எய்ட்ஸ் எச்.ஐ.வி/ஹெபடைடிஸ் பி அல்லது சி
  • செப்சிஸ்
  • ரேபிஸ்
  • லுகேமியா

கண் தானம் பற்றிய உண்மைகள்:

  • ஒரு நபர் இறந்த பின்னர் மட்டுமே கண்கள் அகற்றப்படுகிறது
  • அனைத்து மதத்தினரும் ஆதரிக்கின்றனர்
  • இறந்த 6-8 மணி நேரத்திற்குள் அல்லது 12-24 மணி நேரத்திற்குள் (உடல் குளிரூட்டப்பட்டிருந்தால்) அகற்றப்படும்
  • கண் மருத்துவர் அல்லது பயிற்சி பெற்ற நிபுணரால் மட்டுமே அகற்ற முடியும்
  • நன்கொடையாளர்கள் இறந்த இடத்திலேயே கார்னியா அகற்றப்படுகிறது (மருத்துவமனை அல்லது வீட்டில்)
  • கார்னியாவை அகற்ற 15-20 நிமிடங்கள் மட்டுமே எடுப்பதால் இறுதிச் சடங்கில் தாமதம் ஏற்படாது
  • முகத்தில் எந்த விதமான சிதைவையும் ஏற்படுத்தாது
  • நன்கொடையாளர் மற்றும் பெறுநரின் அடையாளம் ரகசியமாக வைக்கப்படுகிறது

யாரெல்லாம் கண் தானம் செய்யலாம்?:

  • கண் தானம் செய்ய நினைப்பவர்களுக்கு வயது ஒரு பொருட்டல்ல
  • கண்ணாடி அணிபவர்கள், நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், ஆஸ்துமா, கண்புரை அறுவை சிகிச்சை (Cataract) மேற்கொண்டவர்கள்
  • பார்வை நரம்பு கோளாறால் பார்வையை இழந்தவர்கள்

உறவினர்கள் செய்யவேண்டியவை:

  • இறந்த சில மணி நேரத்தில் அருகில் உள்ள கண் வங்கியை தொடர்பு கொள்ளவும்
  • உடல் இருக்கும் இடத்தின் சரியான முகவரியை வழங்குவதால் கார்னியாவை விரைவாக எடுக்க உதவியாக இருக்கிறது
  • இறப்பு சான்றிதழைத் தயாராக வைத்திருக்கவும்
  • இறந்தவர்களின் கண் இமைகளை மூடவும்
  • இறந்தவர் இருக்கும் அறையில் உள்ள மின்விசிறியை அணைக்கவும்
  • தலையணையால் இறந்தவரின் தலையை உயர்த்தவும். இது கண்களை அகற்றும் போது ஏற்படும் இரத்தப்போக்கை குறைக்கும்.

(பொறுப்புத் துறப்பு:இங்கு, உங்களுக்கு வழங்கப்படும் அனைத்து தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆராய்ச்சி, ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது என்பதை குறிப்பிடுகிறோம்)

இதையும் படிங்க: உங்கள் நாக்கு இந்த நிறத்தில் இருந்தால் ஆபத்து.. நாக்கில் தெரியும் ஆரோக்கியம் இதோ!

சர்க்கரை நல்லதா...கெட்டதா? இனி, சாப்பிடும் முன் இதை தெரிஞ்சுக்கோங்க!

ABOUT THE AUTHOR

...view details