தமிழ்நாடு

tamil nadu

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 31, 2024, 10:36 AM IST

ETV Bharat / entertainment

பிரபலங்கள் பகிரும் 'ஆல் ஐஸ் ஆன் ரஃபா' புகைப்படம்.. பின்னணி என்ன? - All Eyes On Rafah

'All eyes on Rafah' என்ற காசா ஆதரவு வாசகம் கொண்ட புகைப்படம் சமூகவலைதளங்களில் 44 மில்லியனுக்கும் அதிகமான முறை பகிரப்பட்டு உலகம் முழுவதும் கவனம் பெற்றுள்ளது.

ஆல் ஐஸ் ஆன் ரஃபா புகைப்படம்
ஆல் ஐஸ் ஆன் ரஃபா புகைப்படம் (Credit - Instagram)

ஹைதராபாத்:கடந்த இரண்டு நாட்கள் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் என எந்த சோஷியல் மீடியாவை ஓபன் செய்தாலும் அதில் 'ஆல் ஐஸ் ஆன் ரஃபா' (All eyes on Rafah) என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருவதைப் பார்த்து இருப்போம். இந்த ஹேஷ்டேக் எதற்காக ட்ரெண்ட் செய்யப்படுகிறது? 'ஆல் ஐஸ் ஆன் ரஃபா' என்றால் என்ன என்பது குறித்து அறியலாம்.

தெற்கு காசாவில் உள்ள ரஃபா நகரத்தில் இஸ்ரேல் படைகள் கடந்த 26 ஆம் தேதி தாக்குதல் நடத்தின. இதில் பெண்கள் மற்றும் குழந்தைகள் என 45 பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டதோடு சுமார் 250 பேர் படுகாயமடைந்துள்ளனர். இது உலக அளவில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதோடு, பல்வேறு நாட்டின் தலைவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஆல் ஐஸ் ஆன் ரஃபா:காசா நகரில் இஸ்ரேல் நடத்தி வரும் படுகொலையை குறிக்கும் வகையில் தான் சோஷியல் மீடியாக்களில் 'ஆல் ஐஸ் ஆன் ரஃபா' என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது. இதனை பிரியங்கா சோப்ரா, ஆலியா பட், கரீனா கபூர், மாதுரி தீட்சித், வருண் தவான், அலி கோனி, சமந்தா ரூத் பிரபு மற்றும் திரிப்தி டிம்ரி உட்பட இந்தியாவில் உள்ள பல பிரபலங்கள் தங்கள் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் "ஆல் ஐஸ் ஆன் ரஃபா" என்பதை பகிர்ந்துள்ளனர். இதே போல் இந்த போஸ்டரை 44 மில்லியனுக்கும் அதிகமான நபர்கள் பகிர்ந்துள்ளனர்.

இஸ்ரேல் - ஹமாஸ் போர்:இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7-ஆம் தேதி ஏவுகணைத் தாக்குதல் நடத்தினர். இதில் இஸ்ரேலிய அதிகாரிகளின் கூற்றுப்படி, 1,189 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 252 நபர்களை ஹமாஸ் அமைப்பினர் பணயக் கைதிகளாக பிடித்து வைத்துள்ளனர். இதில் 37 உயிரிழந்துள்ளனர், 121 காசாவில் உள்ளதாக அதிகாரிகள் கூறி வருகின்றனர்.

இதனையடுத்து காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. தொடர்ந்து இரு தரப்பினரும் போரை துவங்கினர். இதில் ஏராளமான ராணுவ வீரர்களும், பொதுமக்களும் உயிரிழந்தனர். குறிப்பாக இஸ்ரேல் நடத்திய தக்குதலில் குறைந்தது 36,171 பாலஸ்தீன மக்கள் உயிரிழந்து இருக்கக்கூடும் என ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, கடந்த மாத இறுதியில் காசாவில் தற்காலிக போர் நிறுத்தம் கொண்டுவரப்பட்டது. இருப்பினும் பாலஸ்தீன மக்களின் மீது இஸ்ரேல் தொடர் தக்குதல்களை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் ரஃபா நகரத்தில் இஸ்ரேல் படைகள் நடத்திய தாக்குதல்களுக்கு எதிராக "ஆல் ஐஸ் ஆன் ரஃபா" என்ற ஹேஷ்டேக் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

இதையும் படிங்க:ஒரு கிராமத்தின் கடைசி கதை... நிறைவேறாத ஆசையோடு காற்றில் கலந்த கிராமத்தின் கடைசி மனிதர்!

ABOUT THE AUTHOR

...view details