சென்னை: பிக்பாஸ் சீசன் 8 தமிழ் கடந்த 6ஆம் தேதி தொடங்கியது. ஆரம்ப முதலே ஆண்கள் பெண்கள் அணி, 24 மணி நேர எலிமினேஷன் என பல்வேறு சர்ப்ரைஸ்களை, பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு வழங்கினார். பல்வேறு பஞ்சாயத்துக்கு மத்தியில் ஒரு வாரத்திற்கு பிறகு விஜய் சேதுபதி போட்டியாளர்களை சந்தித்தார். விஜய் சேதுபதி முதல் வாரத்திலேயே ஸ்ட்ரிக்ட் ஆபிஸராக நடந்து கொண்டார்.
ஆண்கள் அணி ஒற்றுமையாக இருப்பதாக பிம்பம் உருவான நிலையில், ஆண்கள் அணியில் இருக்கும் மறைமுக அரசியலை போட்டு உடைத்தார். விளையாட்டாக பேசி வைத்து செய்யப்பட்ட பிராங்கின் பின்னணியில் உள்ள தந்திரத்தை, விஜய் சேதுபதி வெளிச்சம் போட்டு காட்டினார். பெண்கள் அணியில் ஒவ்வொருவரும் தனித்துவமாக இருப்பதாகவும், ஆண்கள் அணியில் ஒளிவு மறைவு இருப்பதாகவும் கூறினார்.
தர்ஷிகாவை வீட்டின் தலைவியாக ஆக்கிய முடிவு சரியா? என்ற கேவிக்கு கிட்டதட்ட அனைத்து போட்டியாளர்களும் சரி என்று கூறினர். இது ஒருபுறம் இருக்க வீட்டிற்கு மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்த சாச்சனா பக்கம் விஜய் சேதுபதி கவனம் திரும்பியது. ஆண்கள் அணியில் "பலவீனமான போட்டியாளர்கள் யார் என சொன்னீங்க, பெண்கள் அணியில் யார்? என அவர்களிடம் ஏன் கூறவில்லை என்ற கேள்விக்கு சாச்சனா சமாளிக்க தொடங்கினார்.
ரவீந்தர் சாச்சனா கூறியது சுனிதா, ஹன்ஷிதா என சொல்ல, சுனிதா அழத் தொடங்கினார். சாச்சனா மேல் இருந்த நம்பிக்கை போய்விட்டது என சுனிதா கூறிக் கொண்டிருந்த நிலையில், விஜய் சேதுபதி சாச்சனாவிற்கு எதிராக கேள்வியாக கேட்டு தாக்கினார். பின்பு மளிகை சாமான் பஞ்சாயத்து தொடங்கியது. இதில் பெண்கள் அணிக்கு கரம் மசாலா கொடுத்த ஜெஃப்ரி சரியாக மாட்டிக் கொண்டார். ‘மேஃக் குனாப் சாப்’ என தன் பேச்சை தொடங்கிய ஜெஃப்ரி, பெண்கள் அணியிடம் கரம் மசாலா கொடுத்து, உப்பு வாங்கியதாக கூறினார்.
அப்போது விஜய் சேதுபதி, "ஏம்பா இது மாதிரி சொகுசா இருக்கவும், கேம பேசி சமரசமா முடிக்கவா பிக்பாஸ் வந்தீங்க" என கறாராக கண்டித்தார். பின்னர் விஜய் சேதுபதி "வீட்டில உப்பு, சப்பு சுவாரஸ்யமே இல்லாம இருந்தா எப்படி" என கேட்டார். இதற்கு பிறகு அனைவரும் எதிர்பார்க்கப்பட்ட எலிமினேஷன் பஞ்சாயத்து தொடங்கியது. முத்துக்குமரன், சவுந்தர்யா, அருண் பிரசாத், ஜாக்குலின், ரஞ்சித் ஆகியோர் தப்பித்த நிலையில், ரவீந்தர் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.