தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

பேடிஎம்க்கு தடையா? ரிசர்வ் வங்கி உத்தரவு என்ன? வாடிக்கையாளர்களுக்கு என்ன பிரச்சினை? - பேடிஎம் ஆர்பிஐ தடை

RBI Stops Paytm Payments Bank: பிப்ரவரி 29ஆம் தேதிக்கு பின்னர் புதிதாக வைப்பு தொகை மற்றும் நிதி பரிவர்த்தனைகள் மேற்கொள்ள பேடிஎம் நிறுவனத்திற்கு ரிசர்வ் வங்கி தடை விதித்து உள்ளது.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 31, 2024, 6:36 PM IST

மும்பை : வரும் பிப்ரவரி 29ஆம் தேதி முதல் வைப்பு தொகை மற்றும் நிதி பரிவர்த்தனைகளை மேற்கொள்ள பேடிஎம் பேமன்ட்ஸ் பேங்க் நிறுவனத்திற்கு இந்திய ரிசர்வ் வங்கி தடை விதித்து உள்ளது. பேடிஎம் பேமன்டஸ் பேங்க் நிறுவனத்தின் தணிக்கை அறிக்கை மற்றும் வெளி தணிக்கையாளர்களின் அறிக்கையில் தொடர்ந்து விதிமுறைகளை மீறியதாக எழுந்த புகாரை அடுத்து இந்திய ரிசர்வ் வங்கி நடவடிக்கை மேற்கொண்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

நிர்வாக நடவடிக்கைகள் மற்றும் நிறுவனத்தின் தணிக்கை அறிக்கைகளில் உள்ள விதிமுறை மீறல்களை தொடர்ந்து இந்த நடவடிககி எடுக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி எந்தவொரு வாடிக்கையாளரின் கணக்கிலும் வைப்பு தொகை, பணப்பரிமாற்றம், நிதி சார்ந்த பரிவர்த்தணை, வேலட்டுகள், பாஸ்டேக் உள்ளிட்ட அனைத்து சேவைகளையும் வரும் பிப்ரவரி 29ஆம் தேதி முதல் தொடர முடியாது எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அதேநேரம் வட்டி, திருப்பிச் செலுத்த வேண்டிய பண வரவுகள் உள்ளிட்ட பரிவர்த்தணைகளை தொடர்ந்து மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்குகளில் உள்ள இருப்புத் தொகை காலியாகும் வரை பணம் எடுப்பது, உள்ளிட்ட எந்தவொரு பரிவர்த்தனைகளையும் கட்டுபாடு இன்றி மேற்கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி தெரிவித்து உள்ளது.

முன்னதாக கடந்த 2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் விதிமுறைகளை மீறியதாக புதிய வாடிக்கையாளர்களை இணைக்க வேண்டாம் என பேடிஎம் நிறுவனத்திற்கு இந்திய ரிசர்வ் வங்கி உத்தரவிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க :பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு மேலும் 14 ஆண்டுகள் சிறை! அரசியல் வாழ்க்கை அஸ்தமனமா?

ABOUT THE AUTHOR

...view details