சாகர்: மத்தியப் பிரதேசம் மாநிலம், சாகர் மாவட்டத்தின் ரெஹ்லி தொகுதிக்குட்பட்ட ஷாபூர் கிராமத்தில் இன்று திடீரென சுவர் இடிந்து விழுந்துள்ளது. அப்போது, அங்கிருந்தவர்கள் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர். முதற்கட்டமாக, இந்த விபத்தில் 9 குழந்தைகள் உயிரிழந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
சுவர் இடிந்து விழுந்து 9 சிறுவர்கள் பலி.. மத்தியப் பிரதேசத்தை உலுக்கிய கோர சம்பவம்! - MP wall collapse deaths
By PTI
Published : Aug 4, 2024, 1:23 PM IST
Madhya Pradesh Wall collapse: மத்தியப் பிரதேசத்தில் மத நிகழ்ச்சியின்போது சுவர் இடிந்து விழுந்ததில் 9 சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
சாகரில் சுவர் இடிந்த இடம் (credit - ANI)
இதுகுறித்து சாகர் மாவட்ட காவல்துறை அதிகாரி தெரிவிக்கையில், “இன்று இந்த கிராமத்தில் மத நிகழ்ச்சி நடந்துள்ளது. அப்போதுதான் இந்த விபத்து நடந்துள்ளது. சுவர் இடிந்து விழுந்ததில் 10 முதல் 15 வயதுடைய ஒன்பது சிறுவர்கள் இதுவரை உயிரிழந்துள்ளனர். மேலும், சில குழந்தைகள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்” என்றார். மேலும், சுவர் இடிந்த இடத்தில் சேர்ந்துள்ள பொருட்களை அகற்றும் பணிகள் நடந்து வருகின்றன.