பெங்களூர்:இமாச்சல பிரதேசத்தைச் சேர்ந்தவர் இந்திய ஹாக்கி அணி வீரரான வருண் குமார். இவர் அர்ஜுனா விருது பெற்றவர். இந்திய ஹாக்கி அணிக்குள் 2017ஆம் ஆண்டு நுழைந்த வருண், 2020ஆம் ஆண்டு நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக்கில் (Tokyo Olympics) வெண்கல பதக்கம் வென்ற இந்திய அணியில் இவர் இடம் பெற்றிருந்தார்.
இதையடுத்து, இந்திய அணி ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்றதற்கு, ஹாக்கி வீரரான வருண் குமாரின் பங்களிப்பைப் பாராட்டி இமாச்சல பிரதேச அரசு அவருக்கும் ரூ.1 கோடி அறிவித்தது. இதைத்தொடர்ந்து, 2022ஆம் ஆண்டு நடைபெற்ற பர்மிங்காம் காமன்வெல்த் போட்டியில் (Birmingham Commonwealth Games) வெள்ளியும், அதே ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் (Asian Games) தங்கமும் வென்ற இந்திய அணியிலும் வருண் இடம் பிடித்திருந்தார்.
இந்த நிலையில், இந்திய ஹாக்கி அணி வீரரான வருண் குமார் சமூக வலைதளம் மூலம் பழகி காதலிப்பதாகக் கூறி தன்னை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாக, இளம்பெண் ஒருவர் பெங்களூரு ஒரு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகார் அளித்த பெண் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் எனக் கூறப்படுகிறது.