மும்பை (மகாராஷ்டிரா): 2024 நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வருவதைத் தொடர்ந்து, நாட்டில் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை முழுவீச்சில் செய்து வருகின்றன. அதேபோல, இந்திய தேர்தல் ஆணையமும் நாடாளுமன்றத் தேர்தல் பணிகளை மும்முரமாக செய்து வருகிறது.
நாடாளுமன்றத் தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ள, இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தலைமையில் தேர்தல் அதிகாரிகள் குழு பல்வேறு மாநிலங்களுக்குச் சென்று ஆலோசனை நடத்தி வருகின்றனர். அந்த வகையில், கடந்த வாரம் தமிழகம் வந்த தலைமை தேர்தல் ஆணையர் தலைமையிலான குழு, பிப்.23 மற்றும் பிப்.24 ஆகிய தேதிகளில் மாநில தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ மற்றும் தமிழக அரசியல் கட்சிகள் மற்றும் அமலாக்கத்துறை, வருமான வரித்துறை ஆகியோரிடம் ஆலோசனை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.