தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

"தீபாவளி பண்டிகை சிறப்பு ரயில்கள்; தினமும் கூடுதலாக 2 லட்சம் பேர் பயணிக்கலாம்"

தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகளை முன்னிட்டு நாடு முழுவதும் 7,000 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன எனவும், இவற்றின் மூலம் நாள்தோறும் கூடுதலாக 2 லட்சம் பேர் பயணிக்கலாம் என்றும் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

தீபாவளி சிறப்பு ரயில்கள் இயக்கம்
தீபாவளி சிறப்பு ரயில்கள் இயக்கம் (Credits - ETV Bharat Tamilnadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : 4 hours ago

புதுடெல்லி:தீபாவளி மற்றும் சாத பண்டிகைகளை முன்னிட்டு இந்த ஆண்டு நாடு முழுவதும் மொத்தம் 7,000 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணய் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு மொத்தம் 4,429 சிறப்பு பயில்கள் இயக்கப்பட்ட நிலையில், இந்த இவற்றின் எண்ணிக்கை 7,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ள அமைச்சர், இவற்றின் மூலம் நாள்தோறும் சுமார் 2 லட்சம் பயணிகள் கூடுதலாக பயணிக்க இயலும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தீபாவளி பண்டிகையையொட்டி நாள்தோறும் 136 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்றும், சாத் பூஜைக்காக நவம்பர் 2,3 மற்றும் 4 ஆம் தேதிகளில் 145 கூடுதல் ரயில்களும் இயக்கப்படும் எனவும் மத்திய அமைச்சர் கூறியுள்ளார், பண்டிகைக் காலங்களில் பயணிகள் சுலபமாக பயணம் மேற்கொள்ளும் நோக்கில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதை அடுத்து, பல்வேறு ரயில் நிலையங்களில் கூடுதல் பயணச்சீட்டுகள் வழங்கும் அறை, உணவகம், தண்ணீர் வசதி, பாதுகாப்பு உள்ளிட்டவற்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் ரயில்வே அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

குளிர்சாதன வசதி மட்டும் கொண்ட ரயில்கள், குளிர்சாதன வசதி, படுக்கை வசதி மற்றும் பொதுப் பெட்டிகள் அடங்கிய ரயில்கள், முன்பதிவு செய்யப்படாத ரயில்கள் என பல்வேறு வகைகளில், நாட்டின் பல்வேறு ரயில்வே கோட்டங்கள் வாயிலான நாடு முழுவதும் பல்வேறு இடங்களுக்கு இந்த ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

இதையும் படிங்க: வெடிகுண்டு மிரட்டல் விடுப்பவர்கள் இனி விமானத்தில் ஏறவே முடியாது.. விரைவில் வருகிறது கடுமையான சட்டம்!

பண்டிகை காலங்களில் பயணிகளின் கூட்ட நெரிசலை குறைக்கும் நோக்கில் அக்டோபர் 1 முதல் நவம்பர் 30 ஆம் தேதி வரை நாடு முழுவதும் மொத்தம் 7,001 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இவற்றின் மூலம் குறிப்பிட்ட இரண்டு மாதங்களில் கூடுதலாக ஒரு கோடி பயணிகளை ஏற்றிச் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த சிறப்பு ரயில்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை ஒப்பிடும்போது 60 சதவீத்ம் அதிகமாகும். மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டமன்றத் தேர்தலையொட்டி இயக்கப்படவுள்ள சிறப்பு ரயில்களுடன் கூடுதலாக பண்டிகை கால இச்சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன என்று ரயில்வே துறை மூத்த அதிகாரிகள் கூறியுள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details