சேற்றில் சிக்கிய குட்டி யானை: வனத்துறையினாரல் மீட்பு! - latest news
🎬 Watch Now: Feature Video

கர்நாடக: கர்நாடக மாநிலம் பாண்டிபூர் புலிகள் காப்பகத்தின், ஹெடியாலா சரகம் அருகே உள்ள மீனகட்டே ஏரியில் நேற்று (மே.16) காலை அப்பகுதியாக வந்த குட்டி யானை ஒன்று சேற்றில் விழுந்து சிக்கியது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறையினர் ஜே.சி.பி., இயந்திரத்தின் உதவியுடன் குட்டி யானை மீட்டனர். மீட்கப்பட்ட குட்டி யானை, தனது பாதையில் பயணத்தை தொடர்ந்தது.