ஒகேனக்கல் அருவியில் வெள்ளப்பெருக்கு...பரிசல் இயக்க தடை - ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து
🎬 Watch Now: Feature Video
தர்மபுரி: கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து சுமார் 24 ஆயிரம் கன அடி நீர் காவிரி ஆற்றில் திறந்துவிடப்படுவதால் ஒகேனக்கல் வரும் நீர்வரத்து ஐம்பதாயிரம் கன அடியாக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் 40 நாட்களுக்கு மேலாக குளிக்க தடை உள்ள நிலையில் கடந்த ஒரு வாரமாக பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்தது. நீர்வரத்து அதிகரிப்பால் குளிக்கவும் பரிசளிக்கவும் மாவட்ட நிர்வாகம் மீண்டும் தடை விதித்துள்ளது.