குன்னூர் தேசிய நெடுஞ்சாலையில் ரிலாக்ஸாக உலாவும் யானைகள்
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-15530031-thumbnail-3x2-nil.jpg)
நீலகிரி: குன்னூர் மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பலா மரங்களில் தற்போது பலாப்பழ சீசன் ஆரம்பித்துள்ளது. இதன் காரணமாக சமவெளி பகுதியில் இருந்து யானைகள் கூட்டமாக நீலகிரி மாவட்டத்திற்கு படை எடுத்து வருகின்றன. இந்நிலையில், குட்டிகளுடன் யானைகள் காட்டேரி பூங்கா அருகே சாலையைக் கடந்து சென்றன. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.