மஞ்சுவிரட்டில் சீறிப்பாய்ந்த 31 காளைகளுக்குப் பரிசு
திருப்பத்தூர்: வாணியம்பாடி அடுத்த கிரிசமுத்திரம் கிராமத்தில் காளியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு விழா நடைபெற்றது. இதில் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த 300-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. இதில் குறைவான நொடியில் ஓடிய காளைகளுக்கு முதல் பரிசு ரூ.1 லட்சம், இரண்டாம் பரிசு ரூ.70 ஆயிரம், மூன்றாம் பரிசு ரூ.50 ஆயிரம் என மொத்தம் 31 காளைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.