இனிமேலும் என் மகனை பிரிஞ்சு இருக்க முடியாதும்மா – கனிமொழியிடம் ரவிச்சந்திரனின் தாய் மனு - தூத்துக்குடி மாவட்ட செய்திகள்
🎬 Watch Now: Feature Video
ராஜேஸ்வரியின் மகன் ரவி என்ற ரவிச்சந்திரன், முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு ஆயுள் தண்டனை கைதியாக தற்போதுவரை சிறையில் இருந்து வருகிறார். ரவிச்சந்திரனை நீண்ட கால பரோலில் விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி அவரது தாயார் ராஜேஸ்வரி, தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியை நேரில் சந்தித்து மனு அளித்தார். அப்போது அவர், "இனிமேலும் என் மகனை பிரிஞ்சு இருக்க முடியாதும்மா" என உருக்கமாக தெரிவித்துள்ளார்.