தொடர் கனமழை : வீடுகளுக்குள் புகுந்த நீரால் பொதுமக்கள் அவதி
சென்னையில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக தி.நகர் அரங்கநாதன் சுரங்கப்பாதை, நீரில் மூழ்கியது. அதேபோல் மாம்பழம் முதல் சைதாப்பேட்டை வரை செல்லும் கால்வாயில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால், அவதிபட்டு வரும் மக்கள், விரைந்து தண்ணீரை அகற்றுமாறு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.