தஞ்சையில் ஏழ்மையை போக்கும் மொய்விருந்து! - புதுக்கோட்டை
🎬 Watch Now: Feature Video

தஞ்சாவூர் பகுதியில் தொடங்கப்பட்ட மொய்விருந்து விழா நாளடைவில் புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களிலும் விழாக்காலம் போல் நடைபெறுகிறது. பொருளாதாரத்தில் பின்தங்கி சிரமப்படுபவர்களுக்கே தொடங்கப்பட்டதுதான் மொய்விருந்து. ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெறும் இந்த மொய்விருந்து திருவிழா காலம் போல் காட்சியளிக்கும். இந்நிலையில், இரண்டு மாதமாக நடைபெற்றுவந்த மொய் விருந்து விழா நேற்றுடன் நிறைவுபெற்றது.