ரயில் இருக்கையில் பாம்பு: அலறியடித்த பயணிகள்
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து, திருநெல்வேலிக்குப் புறப்படவிருந்த பயணிகள் விரைவு ரயிலின் இருக்கை ஒன்றில் நான்கு அடி நீளமுள்ள பாம்பு ஒன்று ஊர்ந்துகொண்டிருந்தது. தகவலின்பேரில் விரைந்துவந்த வனத் துறையினர், இருக்கையில் சுற்றியிருந்த கொம்பேறி மூக்கன் வகையைச் சேர்ந்த பாம்பினை லாவகமாகப் பிடித்துச் சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.