நாளை தளர்வுகளற்ற ஊரடங்கு: வானகரம் மார்க்கெட்டில் மீன் வாங்க குவிந்த பொதுமக்கள்!
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-11865999-885-11865999-1621753256484.jpg)
தமிழ்நாட்டில் கரோனா தொற்று பாதிப்பைக் கட்டுக்குள் கொண்டு வர, மேலும் ஒரு வாரத்திற்கு தளர்வுகளற்ற ஊரடங்கு நாளை (மே.24) முதல் அமல்படுத்தப்பட உள்ளது. இதனால் நாளை மீன் மார்க்கெட் மூடப்படுவதால், சென்னை வானகரம் மார்க்கெட்டில் இன்று (மே.23) மீன் வாங்க பொதுமக்கள் அதிகளவில் திரண்டனர். இதனால் கரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.