கன மழையால் காமராஜர் நீர்தேக்கத்தில் நீர்மட்டம் அதிகரிப்பு - கன மழையால் காமராஜர் நீர்தேக்கத்தில் நீர்மட்டம் அதிகரிப்பு
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-8693828-thumbnail-3x2-dam.jpg)
திண்டுக்கல் மாவட்டத்தில் பத்து நாள்களுக்கு முன்பு வரை அணையின் நீர்மட்டம் மிகவும் குறைவாக இருந்தது. தொடர் மழையின் காரணமாக சுமார் 25 கன அடி நீர் காமராஜர் நீர்தேக்கத்திற்கு வந்து கொண்டிருக்கிறது. இதனால் ஆணையின் நீர் மட்டம் 11.5 அடியாக உயர்ந்துள்ளது. மேலும், மேற்குத் தொடர்ச்சி மலை பகுதிகளில் அதிக அளவு மழை பெய்தால் விரைவாக காமராஜர் நீர்தேக்கம் முழு கொள்ளளவை எட்டும் என அப்பகுதியில் விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். அதேபோல் திண்டுக்கல்லுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் காமராஜர் நீர்தேக்கத்தின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் தற்போதைய சூழ்நிலையில் குடிநீர் கட்டுப்பாடு ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை என்று அரசு அலுவலர்கள் தெரிவித்தனர்.