'பனங்காட்டில் பிறந்து உழைப்பால் உயர்ந்த வசந்தகுமார்' - பாரதிராஜா இரங்கல்!
கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் வசந்தகுமாரின் மறைவிற்கு இயக்குநர் பாரதிராஜா இரங்கல் தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ''பனங்காட்டில் பிறந்து கடுமையான உழைப்பால் உயர்ந்த வசந்தகுமாரின் உழைப்பு அளப்பரியது. அவரை இழந்துவாடும் குடும்பத்திற்கு இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்'' என அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.