போக்குவரத்துத் தொழிலாளர்கள் நடத்திய கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, போக்குவரத்து ஓய்வு பெற்றோர் சங்கம் மற்றும் தொழிலாளர்கள் சங்கத்தினர் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில், 2019 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றவர்களின் பண பலன்களை உடனே வழங்கிட வேண்டும். 110 விதியின் கீழ் முன்னாள் முதலமைச்சர் அறிவித்தவாறு ஆண்டுதோறும் வாரிசு பணி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.